Skip to main content

Posts

Showing posts from March, 2020

இலங்கையில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று

கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாகப் மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வைரஸ் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றியவர்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தவிரத் தற்போது 111 பேர் மருத்துவமனையில் பராமரிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் 4 பேரும் அடங்குகின்றார்கள்.

ரொறன்றோ மாநகரத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள் 30 க்கும் அதிகமானோருக்கு கோவிட்-19

ரொறன்றோ மாநகரத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள் 30 க்கும் அதிகமானோருக்கு கொறொனா என்று அழைக்கப்பட்ட கோவிட்-19  வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் 12 பேர், தாதிகள் 13 பேர் ஆகியோரும், வேறு மருத்துவ பணியாளர்கள் ஆறு பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ரொறன்றோ மாநகர பொதுச் சுகாதார மருத்துவர் ஐலீன் டி வில்லா ( Eileen de Villa)  கூறினார். ரொறன்றோ பொதுச் சுகாதார அமைப்பின் பணியாளர்கள் 8 பேர் வைரஸ் தொற்றிய நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த பணியாளர்களும் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.