Skip to main content

Posts

Showing posts from May, 2020

இருபதினாயிரத்தைக் கடந்த ஒன்றாரியோவின் நாளார்ந்த தொற்றுப் பரிசோதனை!

ஒன்றாரியோ மாகாணத்தில் முதன் முதலாக இருபதினாயிரத்தும் மேற்பட்ட நாளார்ந்த கொறோனா தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக் குறி;த்து இருபதாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாரியோவில், நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கு அனேக நாட்களில் எட்டப்படுவதில்லை. இந்நிலையில் 20,640 பரிசோதனைகள் என்ற இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்காத எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே 8ம் நாள் மேற்கொள்ளப்பட்ட 19,834 பரிசோதனைகள் இதுவரை கூடுதலான பரிசோதனையான இருந்து வந்தது. இதேவேளை ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 323 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். இத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,533 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77.6 சதவீதமான 21,353 பேர் குணமடைந்துள்ளனர். பிந்திய 17 இழப்புக்களுடன் இதுவரை 2309 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளுர் நேரப்படி இன்று மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியல், கனடாவில் 90,166 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 7073 பேர் உயிரிழந...

ஓன்றாரியோவில் இன்று 344 தொற்றுக்கள் பதிவாகின.

ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 கொறோனா நுண்மித் பெருத்தொற்றால் பாதிக்கப்பட்ட 344 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். இத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,210 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77 சதவீதமான 20,983 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை பிந்திய 41 இழப்புக்களுடன் இதுவரை 2275 பேர் உயிரிழந்துள்ளனர். இருபதாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாரியோவில் நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கு அனேக நாட்களில் எட்டப்படுவதில்லை. இருந்த போதும் கடந்த மே 8ம் நாள் மேற்கொள்ளப்பட்ட 19,834 பரிசோதனைகளுக்கு அடுத்ததாக, நேற்றைய தினம் 18,525 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹமில்டன் மற்றும் ரொறண்டோ பெரும்பாகத்திற்குட்பட்ட 3276 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்றாரியோவின் ஏனைய பகுதிகளில் கிசிச்சை பெற்று வருவபவர்களின் மொத்த எண்ணிக்கை 721 ஆகக் காணப்படுகின்றது.

ஒன்ராறியோவில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

ஒன்ராறியோவில் மீண்டும் தொற்று எண்ணிக் கை  அதிகரிப்பு கடந்த இரண்டு நாட்களாக 300க்கும் குறைவாகக் காணப்பட்ட நாளாந்தத் தொற்று எண்ணிக்கை இன்று 383 ஆக அதிகரித்துள்ளது.   ஒன்ராறியோவில் நேற்று 292 புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தன. அதற்கு முதல் நாள் 287 தொற்றுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இன்று திடீரென கணிசமான அளவு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. நோய் அதிகரிப்பு வீதம் ஆறு> ஏழு என்ற சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நீண்டகாலத்தின் பின் ஏற்பட்ட குறைந்த வீதமாகும் என டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம் கூறினார். இன்றைய தரவுகளின்படி> நேற்று 24 மணிநேர காலப்பகுதியில் 17>615 சோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த சில நாட்களை விட இது அதிகமானதாகும். ஒன்ராறியோ இன்று; 34 இறப்புகளை அறிவித்துள்ளது. இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 2>189ஆக உயர்ந்துள்ளது. ஒன்ராறியோவில் இதுவ ரை   26>866 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20>673 குணமடைந்துள்ளனர்.

சேவை வெட்டுகளுக்குத் தயாராகும் நகாராட்சிகள்

   சேவை வெட்டுகளுக்குத் தயாராகும் நகாராட்சிகள்:  உதவத் தயங்கும் மத்திய, மாகாண அரசுகள். தொற்று நோய் தொடர்பான அவசரச் செயற்பாடுகளையடுத்து பல மாநகராட்சிகள் பெரு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதில் அவை பெருஞ் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. இவை தொடர்பாக மத்திய மாகாணஅரசுகளுக்கு அவசர உதவி கோரி கோரிக்கைகள் விடப்பட்ட போதும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மாநகராட்சி முதல்வர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒன்ராறியோவின் பெரிய நகர மேயர்களின் கூட்டமைப்புத் தவைவரான கல்ப் (Guelph) மாநகர முதல்வர் Com  Guthrie     (கம் குத்ரி) கருத்துக கூறுகையில், எமது பற்றக்குறையை நிவர்த்தி செய்ய எம்மால் முடியவில்லை. ஒன்ராறியோ முழுவதும் உள்ள நகராட்சிகள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. அரசாங்கத்தின் இரு மட்டங்களிலிருந்தும் நிதியுதவி பெற வாய்ப்புகள் இல்லையென்றால் பணியாளர்களைக் குறைப்பது குறித்தும் சேவை வெட்டுகளைச் செய்வதைப் பற்றியும் சிந்திக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.  போக்குவரத்து சேவை தொடர்பாக ஏப்பிரல் முதல் ...

Trinity Bellwoods பூங்காவில் இடைவெளி பேணும் வட்டங்கள்

Trinity Bellwoods  பூங்காவில் இடைவெளி பேணும் வட்டங்கள்  கடந்த வாரம் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதால் Trinity Bellwoods பூங்கா விடம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது. அதைத் தொடர்ந்து மக்கள் இடைவெளியைப் பேணும் வகையில் பூங்காக்களில் இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இத்திட்டத்தை ரொரண்ரோ மாநகரசபை முன்னெடுத்துள்ளது.  இன்று காலை இந்த வட்டங்களை வரையும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. எட்டு அடி விட்டம் கொண்ட இந்த வட்டங்கள் 10 அடி இடைவெளியில் வரையப்படுகின்றன. இதேபோன்ற வட்டங்கள் சான் பிரான்சிஸ்கோ, நியூயோர்க் நகரங்களில் உள்ள பூங்காக்களிலும் வரையப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  "ஒரு பூங்காவில் ஒரு வட்டத்தை ஓவியம் வரைவது எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவாகாது. நிச்சயமாக மக்கள் அவர்களைப் புறக்கணிக்கலாம், மக்கள் அதைக் கடந்தும் செல்லலாம். பெரும் எண்ணிக்கையிலும் வரக்கூடும். ஆனால் இது மிகவும் செலவு குறைந்த எளிமையான நடைமுறையாகும். மக்கள் உடல் ரீதியான இடைவெளியைப் பேண வேண்டு;ம என்பதை நிகைவுபடுத்த இது உதவும். எனத் தொற்று நோய்த் தடுப்பு நிபுணர் மருத்துவர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளா...

ரொறண்டோ பெரும்பாகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வராத கொறோனா, அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 என்று மாகாண அரசு அறிவித்தது. அத்துடன் 32 பேர் உயிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேல் தொற்றுக்கள் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்னூற்றுக்கும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோவின் இதுவரை கோவிட் 19 தொற்றால் 26 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,372 பேர் குணமடைந்துள்ளதுடன், 2223 நோயாளிகள் இத்தொற்றால் இறந்துள்ளனர். இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 3931 பேரில். 78 சதவீதமான 3054 பேர் ரொறண்டோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது. இவ்வாறே கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளான ஐந்தாயிரம் பேரில் 52 சதவீதமானவர்களும், மே மாதத்தில் 76 சதவீதமான 6600 பேரும் ரொறண்டோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். ரொறண்டோ நகரில் மட்டும் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,525 ஆகவும், இவர்களில் 7814 பேர் குணமடை...

ஒன்றாரியோவில் கொறோனா தொற்று எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று ஒன்றாரியோவில் மீண்டும் தணிவடைந்தது. கடந்த ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேற்பட்ட தொற்றுக்களை பதிவு செய்து வந்த நிலையில், இன்று நாளார்ந்த தொற்றுப் பதிவு 1.1 சதவீமாக 287 புதிய தொற்றுக்கள் பதிவாகின. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 21 இழப்புக்களுடன் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 2194 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை தினமும் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கை நேற்றைய தினமும்  எட்டாத நிலையில், 9ஆயிரத்து 875 பரிசோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிந்திய 287 தொற்றுக்களுடன் ஒன்றாரியோவில் இதுவரை மொத்தம் 26,191 தொற்றுக்கள் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 76.2 சதவீதமான 19,958 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான காலமானார்.

இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று தனது 55-வது அகவையில் தலங்கமா மருத்துவமனையில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்ட வேளையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்று பகல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் Gopal Baglay ஐ கொழும்பில் சந்தித்து மலையக மக்களுக்கான பத்தாயிரம் வீட்டுத் திட்டம் பற்றி உரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து அரசுத் தலைவர் கோட்டபாயவுடனும் சந்திப்பு நிறைவு செய்து, வீடு திரும்பும் வழியிலேயே அவர் சுகவீனமுற்றதாக தெரியவருகிறது. சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை துணிகரமாக தீர்க்கக் கூடிய அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த அவர், கோட்டபாய ராஜபக்சவுக்கு கடந்த தேர்தலில் ஆதரவை வழங்கினார். தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சவின் அரசில், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவி வகித்து வந்தார். காலம் சென்ற  ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் கொ ங்கிரசின் முன்னாள் தலைவருமான  அ...

இருபத்தாறாயிரம் கொறோனா தொற்றை எட்டும் ஒன்றாரியோ.

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பரவுகையானது 26 ஆயிரம் எண்ணிக்கையை எட்டுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 404 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 904 தொற்றுக்கள் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நேற்று பதிவான 29 இழப்புக்களுடன் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 164 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 75 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில் 76 சதவீதமான 19 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளதாகவும் பொதுச் சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒன்றாரியோவில் நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகளை நடத்துவதற்கான இலக்கு முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை அனேகமாக எட்டப்படுவதில்லை. நேற்றைய தினம் 8,107 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. கனடாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குபெக்கில், கடந்த 24 மணிநேரத்தில் 573 புதிய தொற்றுக்கள் இனம் காணப்பட்டன. இந்நிலையில் அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 987 ஆக உயர்வ...

கோவிட்-19: குபெக்கில் 697 புதிய தொற்றுக்கள்: எண்பதினாயிரத்தைக் கடந்த கனடா.

குபெக்கில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 697 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன. இந்நிலையில் குபெக்கில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,838 ஆக அதிகரித்தது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 75 இழப்புக்களுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3940 ஆக அதிகரித்தது. தீவிர கண்காணிப்பில் உள்ள 167 பேர் உட்பட 1452 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறே ஏனைய மாகாண பிரதேச நிலைகளை நோக்குமிடத்து, இவ்வாறு காணப்படுகின்றது. இந்த வகையில், கனடாவில் இன்று பிற்பகல் ஒரு மணிவரையான புள்ளிவிபரங்களின் படி, 83,950 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 43,212 பேர் குணமடைந்துள்ளதுடன், 6433 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இருபத்தைந்தாயிரம் தொற்றுக்களைக் கடந்தது ஒன்றாரியோ!

ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 412 கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,040 ஆக உயர்வடைந்துள்ளது. இறுதியாக பதிவான 27 இழப்புக்களுடன் இதுவரை 2113 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் 76.5 சதவீதமான 19,146 பேர் குணமடைந்தும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களி;ல் 62.6 சதவீதமானவர்கள் நீண்டகால பராமரிப்பு மருத்துவ இல்லங்களில் தங்கியிருந்த மூதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாளார்ந்தம் இருபதினாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதி ஆய்வுகூங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சராசரியாக நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகளை நடத்துவதற்கான இலக்கு முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை அனேகமாக எட்டப்படுவதில்லை. நேற்றைய தினம் 11,028 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

ஒன்றாரியோவில் கொறோனா பரவுகை அதிகரிப்பு

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மிப் பரவுகை மீண்டும் ஒரு அதிகரிப்பை இன்று பதிவு செய்தது. நாளார்ந்த பரவுகை வீதமானது 1.8 சதவீதத்தால் அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 441 பேர் பரவுகையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 08ம் நாளுக்குப் பின்னர் பதிவான கூடுதலான எண்ணிக்கையாக பொதுச் சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் பதிவான 28 இழப்புக்களுடன் இதுவரை 2100 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 77 சதவீதமானவர்கள் நீண்டகால பராமரிப்பு மருத்துவ இல்லங்களில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றாரியோவி;ல் தொற்றுக்குள்ளாகியுள்ள 24,628 பேரில் 76.2 சதவீதமான 18,767 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரொறண்டோ மிருகக் காட்சிசாலை நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் பார்வைக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொறோனா பரவுகையைக் கட்டுப்படுத்தும் வண்ணம் பொதுச் சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய 45 நிமிட நேரம் வாகனங்களில் இருந்த வண்ணம் 3.4 கிலோமீற்றர் சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்...

இரண்டாயிரம் இழப்பைக் கடந்தது ஒன்றாரியோ!

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து பதினெட்டாக(2018) உயர்வடைந்ததாக பொதுச் சுகாதார திணைக்களத் தகவல்கள் காட்டுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 390 தொற்றுகள் இனம் காணப்பட்ட நிலையில், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 774 ஆக உயர்வடைந்தது. அத்துடன் நேற்றைய தினம் பதிவான 43 இறப்புக்களுடன் மொத்தமான 2018 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 76.5 சதவீதமான 18 ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்கள் குறித்து நாளார்ந்தம் 16 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது என்ற இலக்கு நேற்றைய தினமும் எட்டப்படவில்லை. சுமார் 7 ஆயிரத்து 382 பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஏற்பட்ட 43 இழப்புக்களில் 33 நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்நிலையில் ஒன்றாரியோவில் இதுவரை பதிவான மரணங்களில் 74 சதவீதமான 1500 இழப்புக்கள் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளன. பிந்திய பதிவுகளின் படி கனடாவில் கொறோ...

செப்ரெம்பர் வரை ஒன்டாரியோ பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்!

ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்கள் எஞ்சியுள்ள  இக்கல்வியாண்டு(2019-2020) முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன், கொறோனா தொற்றில் இருந்து அவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணங்களை முதன்மையாகக் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சற்று முன்னர் சட்டசபை வளாகத்தில் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் செய்தியாளர்களிடம் கூறினார். கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மாகாண அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிலையை அடுத்து மார்ச் இரண்டாம் வாரம் முதல், அரச நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் செயற்பாடு தொடர்பில் முதல்வர் டக் ஃபோர்ட்டும் மாகாண கல்வி அமைச்சர் ஸ்ரீஃபென் லெச்சோ இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். கொறோனா தொற்றுக் குறித்து சுகாதாரத் துறையினருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைவாக எஞ்சியுள்ள இக்கல்வியாண்டு வரை பள்ளிக்கூடங்களை மூடுவது என்று முடிபு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மார்ச் பிறேக்கை உள்ளடக்கி மூன்று வாரங்கள் மூடப்படுமென ஆரம்பத்தில் அறிவிக்கப்...

ஒன்டாரியோவில் கொறோனா தொற்று அதிகரிப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 427 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.. இது நேற்று அடையாளம் காணப்பட்ட 304 தொற்றுக்களில் இருந்து 1.9 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 384 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 15 இழப்புக்களுடன் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐந்தாக(20005) அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 70 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த முதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில், இதுவரை 17 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற்றம் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இந்த வாரங்களில் ஆரம்பிக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனினும், தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் முன்னர் கொண்டுவரப்பட் கட்டுப்பாடுக...

கனடா அமெரிக்கா எல்லை யூன் 21ம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்

கனடா அமெரிக்கா எல்லை யூன் 21ம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்  கனடா அமெரிக்கா எல்லை தொடர்ந்து யூன் 21ம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைகளை முன்னிட்ட பாரவூர்திகள் உள்ளிட்ட பயணங்கள் தொடரும் அதேவேளை அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களும் யூன் 21 வரை தடை செய்யப்பட்டுள்ளன.  கடந்த மார்ச் 20 திகதி மூடப்பட்டிருந்த எல்லை மே 21 திறக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் வெளியாகியிருந்தன. எல்லையைத் திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒன்றாரியோவில் குறைவடையும் கொறோனா தொற்றின் தாக்கம்!

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மிப் பரவுகையால் பாதிக்கப்பட்ட 304 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கொறோனா தொற்று பரிசோதனைகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 957 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 மரணித்த நிலையில், இதுவi உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1904 ஆக அதிகரித்தது. எனினும் நாளார்ந்தம் இனம் காணப்படும் தொற்றுக்களின் சதவீதம் 1.3 ஆக வீழ்ச்சி கண்டுள்ளமை முன்னேற்றகரமாக கருதப்படுகின்றது. மேலும் கொறோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களில் 76.8 சதவீதமாக 17 ஆயிரத்து 638 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை கனடாவில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 017 ஆகவும், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு (5932) ஆகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 140 ஆகவும் காணப்படுகின்றது.

ஸ்ரீலங்கா மீதான இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச சட்டங்களின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதி செய்யலாம் - ஹரி ஆனந்தசங்கரி

ஸ்ரீலங்கா மீதான இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச சட்டங்களின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதி செய்யலாம் என்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்   ஹரி ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.  மே 18,  தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழுவடிவம்: உலகம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு இலங்கை ஆயுதப் படையினர் தமிழர்கள் மீது புரிந்த படுகொலையில் பொதுமக்கள் 70,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 300,000 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கடைப்பிடிக்கிறார்கள்.  மரணமானவர்களையும், காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளையும் வாழ்க்கைத் துணைகளையும், நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டவர்களையும் இன்று மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் நினைவுகூருகிறோம். பதினொரு வருடங்களின் பின்னரும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. உண்மை, நீதி, பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான தேடல் இன்றும் தொடர்கிறது. கோவிட்-19 உலகைத் ...

கோவிட்-19 ஒன்றாரியோ: இரண்டாவது வாரமாக குறைவடையும் தொற்றுக்கள்

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் கடந்த 24 மணிநேரத்துள் 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சராசரியான நாளார்ந்த அதிகரிப்பு வீதத்தில் குறைவாக 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையானது 22 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 17 ஆயிரத்து 360 பேர் குணமடைந்தும் 1881 பேர் மரணித்தும் உள்ளனர். மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 171 பேருடன் மொத்தமாக 934 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 62.8 சதவீதமானவை ரொறண்டோ பெரும்பாகத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 ஒன்றாரியோ: இன்று 391 தொற்றுக்கள் பதிவு

ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதாக பிந்திய புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை பதிவான 341 தொற்றுக்களில் இருந்து 1.8 சதவீத அதிகரிப்பை பிந்திய பதிவு காட்டுகின்றது. இதன் பிரகாரம் 22 ஆயிரத்து 313 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1720 பேர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒன்றாரியோவில் ஏற்பட்ட 33 இறப்புக்களுடன் இத்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1858 ஆக அதிகரித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் பதிவாகியுள்ள தொற்றுக்களில் 57.1 சதவீதமானோர் பெண்கள் என்றும், 42.2 சதவீதமானோர் ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கனடாவில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75,963 ஆக பதிவாகியது. இவர்களில் 36,908 பேர் குணமடைந்துள்ளதுடன், 5680 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நேற்றைய எண்ணிக்கைக் கணிப்பில் தவறு? இன்றைய அதிகரிப்பு 428

நேற்றைய எண்ணிக்கைக் கணிப்பில் தவறு? இன்றைய அதிகரிப்பு 428 Add caption நேற்று வெளியான 258 என்ற கோவிட் 19 தொற்று எண்ணிக்கை தவது என ஒன்றாரியோ  நலத்துறை  அமைச்சு அறிவித்திருக்கின்றது. 87 புதிய தொற்றுகள் நேற்றைய எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. நேற்றைய சரியான எண்ணிக்கை 345 ஆகும்.  இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கை 341 ஆகும். இத்துடன் நேற்றுத் தவறவிடப்பட்ட 87 என்ற எண்ணிக்கையையும் சேர்த்து 428 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று வெளியான எண்ணிக்கை நம்பிக்கையைத் தூண்டுவதாக இருந்தது. விரைவில் மக்கள் வழமைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எண்ணிக்கைத் தவறு சற்று பின்னடைவையே காட்டுகின்றது.  கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 339 புதிய தொற்றுகள்; மாகாணத்தில் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களும் நம்பிக்கை தரும் வீழ்ச்சியைக் காட்டவில்லை.   கடந்த 24 மணி நேரத்தி ல்  27 மரணங்கள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 1>825 பேர் இறந்துள்ளனர...

மரபணு மாற்றமடையும் கொறோனா!

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று தொடர்ந்தும் மரபணு மாற்றம் (mutation) பெற்ற நிலையில், 185 நாடுகளுக்கும் மேல் பரவுகையை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மருத்துவராக கடமையாற்றும் துரைராஜா வரதராஜா குவிரன் ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார். முழுமையான செவ்வியை பார்க்க பின்வரும் இணைப்புக்கு செல்க .  COVID-19 Interview with Dr. T. Varatharajah

ஒன்றாரியோ மீள்கின்றது: புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 258

ஒன்றாரியோ மீள்கின்றது: புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 258 ஆறு வாரங்களுக்குப் பின் ஆகக் குறைந்த எண்ணிக்கையாக 258 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.   கடந்த ஏப்ரல் 25 திகதி அதிகூடிய நாளாந்த எண்ணிக்கையாக 640 காணப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியது. எனினும் ஏற்ற இறக்கமாகக் காணப்பட்ட நாளாந்தப் பரவல் அண்மை நாட்களாகக் கணிசமாகக் குறைவடைய ஆரம்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று குறைந்த எண்ணிக்கை அவதானிக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 346 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டிருந்தன. இந்த வாரத்தில் 300 குறைந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தும் இரண்டாவது நாள் இதுவாகும்.  ஒன்ராறியோவின் நலத்துறை நடுவத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இது மிக விரைவான கீழ்நோக்கிய போக்கு அல்ல. இத்தொற்று வீழ்ச்சியுறாத போக்கினையே நாம் காண்கின்றோம் எனக் கூறியிருந்தார். நாம் வழமை நிலைக்குத் திரும்புவதற்கு எண்ணிக்கையின் அளவு மேலும் குறைய வேண்டும் எனத்...

பூங்காக்கள் பாரம்பரிய பார்வைத் தளங்கள் படிப்படியாகத் திறக்கப்படும்.

பூங்காக்கள் பாரம்பரிய பார்வைத் தளங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் கோவிட் 19 தாக்கத்தில் இருந்து கனடா மெல்லமெல்ல மீண்டுவரத் தொடங்கியிருக்கின்றது. இதையடுத்து மத்திய பூங்கா தேசிய பூங்காக்கள், பாரம்பரிய சுற்றுலாத் தளங்களைப் படிப்படியாக மீண்டும் திறக்கும் திட்டத்தை இன்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.  கோவிட் 19 தொற்றுப் பரவலையடுத்து அனைத்து தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.  இந்த இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னரே இவற்றைப் படிப்படியாகத் திறப்பது குறித்த திட்டம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  படிப்படியாகத் திறக்கப்படும் திட்டத்தின் கீழ் 38 பூங்காக்கள் மற்றும் 171 வரலாற்று தளங்கள் உள்ளன, இதில் கலங்கரை விளக்கங்கள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன உள்ளடங்குகின்றன. மைய அரசு இவற்றைப் பராமரித்து வருகின்றது.  எனினும் வரவிருக்கும் வார இறுதியில் இவை திறக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Western மருத்துவமனையில் 5ம் தடவையாகக் கோவிட் 19 தொற்று.

  Western மருத்துவமனையில் 5ம் தடவையாகக் கோவிட் 19 தொற்று. ரொராண்ரோ Western மருத்துவமனையில் மேலும் 5 ஊழியர்கள் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இம்முறை அவசர சிகிச்சைப் பிரிவில் இத்தொற்று பரவியிருக்கின்றது. இந்த மருத்துவமனையில் தொற்று கண்டறியப்படுவது இது 5வது தடவையாகும்.  இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 முதல் மே 3 வரை அவசரப் பிரிவில் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையின் அவசரப் பிரிவு மூடப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் அவசரப் பிரிவை மூடத்தேவையில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.  ஏற்கனவே இந்த மருத்துவமனையில் 4 தடவை தொற்றுகள் பணியாளர்களிடையே உறுதிப்படுத்தப்பட்;டிருந்தன. இரு தடவை கோவிட் 19 நோயாளர் பகுதியிலும் இரு தடவை பிற பகுதிகளிலும் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.  இத்தடவை அவசர சிகிச்சைப் பிரிவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஒன்றாரியோவில் அவரசகாலப் பிரகடனம் நீடிப்பு

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ அரசால் மார்ச் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நடைமுறைச் சட்டம் யூன் 2 ம் திகதிவரைநீடிக்கப்படுகிறது மாகாண அரசின்.  மேலாண்மை , சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இச்சட்டம் இன்று ஒன்றாரியோ சட்டப் பேரவையில் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்றுநோய்யைக் பெருமளவில் கட்டுப்படுத்துவதற்குரிய ஆற்றலை மாகாணம் உறுதிப்படுத்தும் நோக்கிலும் தொடர்ந்தும் படிப்படியாக வணிகங்கள். சேவைகளையும் திறக்கும் நோக்குடனும் இது நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த நீடிப்பானது, தற்போதைய அவசரகால நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவும் சிறப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவும். ஓய்வூதியம் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதை இச்சட்டம் தடுக்கின்றது. 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவதை இது தடை செய்கின்றது. அவசரகால சட்டத்தின் கீழ் 150 நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஒன்றாரியோவில் கோவிட் 19 மீண்டும் உயர்வு – காரணம் கட்டுப்பாடுகளின் தளர்வா?

ஒன்றாரியோவில் கோவிட் 19 மீண்டும் உயர்வு – காரணம் கட்டுப்பாடுகளின் தளர்வா?  ஒன்றாரியோவில் இன்று 361 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளன. நேற்று 308 தொற்றுகள் பதிவாகியிருந்தன.   கடந்த ஆறு வாரங்களில் முதல்முறையாகச் சரிவைச் சந்தித்துவரும் இந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை ஏறுவதுவும் இறங்குவதுவுமாக இருந்து வருகின்றது.  கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக் காரணமாக 56 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1776 ஆகும். இந்த நோய் படிப்படியாகக் குறைத்து செல்வது எளிதான காரியம் அல்ல, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இவை சிலவேளை தொற்று எண்ணிக்கை உயர்வை அதிகரிக்கலாம். கணிசமான அளவு நோய் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டால் மீண்டும் நாம் கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்' எனத் தொற்றுநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரத்தில் சராசரியாக 378 புதிய தொற்றுகள் காணப்பட்டுள்ளன. இது நம்பிக்கையளிப்பதாகக் கூறப்படுகின்றது.  தொற்று நோய் தொடர்பான சோதனை 19,577 என்ற உச்சத்தில் இருந்து குறைவடைய தொ...