Skip to main content

Posts

Showing posts from July, 2020

திரையரங்குகளுள் உள்வாங்கப்படுவோர் மீதான கட்டுப்பாடுகளில் தளர்வைக் கோரும் சினிப்பிளக்ஸ்!

திரையரங்குகளை மீளத் திறப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு சினிப்பிளக்ஸ்(Cineplex) நிர்வாகம் ஒன்ராறியோ அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட்-19 நுண்மித் தொற்று இறுக்க நிலையில் இருந்து வழமைக்குத் திரும்புதல் தொடர்பான 3ம் கட்டத்தின் போது திரையரங்குகளில் 50 பேர் மட்டும் உரிய பாதுகாப்பு விதிகளுடன் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் பணியாளர்களின் ஊதியம் உட்பட அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்வதற்காக வருவாயை ஈட்டுவதற்கு 50 பேரை உள்ளடக்கிய நிலையில், திரையரங்குகளை இயக்குவதன் மூலம் ஈட்டும் வருமானம், இத்தொகையை சமாளிக்க போதுமானதல்ல என்று கனடியத் திரையரங்கச் சம்மேளனத் தலைமை அதிகாரி டன் மெக்ராத் (Dan McGrath) தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ மகாணத்தில் 35 இடங்களில் சினிப்பிளக்ஸ் திரையரங்குகள் மீளத் திறந்தபோதும் வருவாய் இழப்புடனேயே அவை இயங்குகின்றன. கொறோனா நுண்மித் தொற்றுநோய் காரணமாக பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 130 ஊழியர்களை சினிப்பிளக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. திரையங்குகள் குறைந்த பட்ட இலாபத்துடனாவது இயங்க அனுமதி...

ரொரண்ரோவில் கடும்காற்றுடன் பெருமழை : மரங்கள் முறிவு : வாகனங்கள் சேதம்!

ரொரண்ரோவில் இன்று பிற்பகல் இடியுடன் பெருங்காற்றும் மழையும் பெய்ததைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதுடன், நிலகீழ் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்து வாகனங்களும் வீடுகளும் சேதமடைந்தன. வீடு வாகனம் சேதம் - காணொளி இதனைத் மின்சாரக் கம்பிகள் சேதமடைந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியது. ரொரண்ரோவின் சில பகுதிகளில் அரை மணி நேரத்தில் 65 மில்லி மீட்டர் வரையான மழைவீழ்ச்சி ஏற்பட்டதென சுற்றுச் சூழல்க் கனடா தெரிவித்தது.

பியர்சன் விமானநிலைய கட்டுப்பாட்டை மதிக்காத அன்றூ ஷியர்!

Pic Credit : TWITTER ரொரண்ரோ பியர்சன் விமானநிலையத்தில் விமானத்தை சென்றடையும் வாயிற்கதவு அருகேயான காத்திருப்புப் பிரதேசத்தில், கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் அன்றூ ஷியர்(Andrew Scheer) முகக் கவசம் இன்றி அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், மெனிற்றோபா மாகாண முதல்வர் பிறயன் பெலிஸ்ரருடன்(Brian Pallister) பேசிக் கொண்டிருக்கின்றார். கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஜூன் 01ம் நாள் முதல் பியன்சன் விமானநிலைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை ஒழுங்கின் பிரகாரம், விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளிப்புறமாக அந்த வளாகத்துள்ளும், வாகனத் தரிப்பிடங்களிலும் பணியாளர்கள் பிரயாணிகள் உட்பட அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிமுறையை மீறும் வண்ணம் கனடிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷியர், இன்று ஒடாவா பயணிக்கும் முன்னர் விமானநிலையத்தில் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத் தளங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ஆகவை இரண்டுக்கு உட்பட்டோர், சுய...

வின்ற்சர் எசக்ஸ்சில் 20 தொற்றுக்கள் மட்டுமே!

ஒன்ராரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளில் முறையே 149, 153 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று கனடா தினம் நாளார்ந்த தொற்றுக்கள் குறித்த அறிக்கை வெளியாகியிருக்காத நிலையி;ல், இன்று அந்த இரண்டு அறிக்கையும் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் 24,322 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒன்ராரியோவி;ல் இதுவரை 35,370 தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், இவற்றில் 86.9 சதவீதமான 30,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2680 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 29 பிரிவுகளில் ஐந்திற்கும் குறைவான அல்லது எவ்வித தொற்றுக்களும் அடையாளம் காணப்படாத பிரிவுகளாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிறின்ரீன் எலியட் தெரிவித்தார். கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட முடக்கநிலையில் இருந்து படிப்படியாக தளர்வை மேற்கொண்டு நாளார்ந்த இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் மாகாண அரசின் நடவடிக்கையின் இரண்டு கட்ட தளர்வுகள், ஒன்ராரியோவில் வின்ற்சர் எச...

ஒன்ராரியோ பொதுச் சுகாதாரத் துறைத் தலைவர் பதவி விலகினார்

ஒன்ராரியோ மாகாண பொதுச் சுகாதாரத் துறையின் தலைவர் மருத்துவர் பீற்றர் டொன்லீ (Peter Donnelly), தனது பொறுப்பில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக இன்று அறிவித்தார். கோவிட்-19 கொறோனா நுண்மிப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பங்காற்றிய அவருக்கு ஏற்பட்டுள்ள இருதய நோய் தொடர்பாக அறிகுறி காரணமாக, இந்த முடிபை எடுத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக சிறப்பான செயற்பட்டு வந்த அவர் சுகயீனம் காரணமாக, கடந்த ஏப்ரலில் தான் பதவி விலகும் அறிவிப்பை வெளியிட இருந்த போதும், கோவிட்-19 காரணமாக நிலவிய அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு தன்னால் இயன்றளவு கடமையை ஆற்றி வந்ததாக டொன்லீ குறிப்பிட்டார். எனினும் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் குடும்பத்தினருடன், பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் தனது பொறுப்பில் இருந்து நிரந்தரமான விலகும் முடிபை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒன்ராரியோ மாகாண பொதுச் சுகாதாரத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு மருத்துவர் கொலீன் ஹைகரை(Colleen Geiger )சபை கோரியுள்ளது.