Skip to main content

Posts

Showing posts from August, 2020

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒன்ராறியோவில் அதிகரித்த கொறோனா பெருந்தொற்றுக்கள் பதிவு!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 32,106 பரிசோதனைகளில் 148 பேருக்கு கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன. கடந்த ஜூலை 24ம் நாளுக்கு பின்னர் இன்றைய தினம் அதிகரித்த நாளார்ந்த தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,083 ஆக அதிகரித்ததுடன், இவர்களில் 0.4 சதவீதமான 38,126 பேர் குணமடைந்துள்ளதுடன், 2809 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஒன்ராறியோவில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 27 இல் ஐந்து அல்லது அதற்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 18 இல் எவ்வித தொற்றுக்களும் பதிவாகவில்லை என்று மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சென்றுள்ள 13 ஐபிஎல் வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று: சுரேஸ் ரெய்னா இந்தியா திரும்பினார்.

துபாயில் செப்ரெம்பர் 19ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் கிறிக்கட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள சென்னை சுப்பர் கிங் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கோவிட்-19 கொறோனா தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். ஏனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார் என்று கூறப்படுகிறது. கடந்த 21ம் நாள் துபாய் சென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட பரிசோதனைகளில் இதுவரை 13 பேருக்கு தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்ரெம்பர் 01ம் நாள் வரை அந்த அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  எனினும் இத்தொடரில் விளையாடவுள்ள ஏனைய அணிகள் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண் திறந்தார் எஸ்பிபி

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்காப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூன்று நாட்களின் பின்னர், இன்று மயக்க நிலையில் இருந்து மீண்டு கண் திறந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் முன்னேற்றம் கண்டதாக அறவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் கண் திறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே எஸ்பிபியின் மனைவி சாவித்திரிக்கும் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையில் அவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

ஒன்ராரியோவில் மிகக் குறைந்தளவான கோவிட்-19 தொற்றுக்கள் பதிவு!

  ஒன்ராரியோவில் கோவிட்-19 நுண்மித் தொற்றுக்கள் தொடர்பான 21,581 நாளார்ந்தப் பரிசோதனையில் புதிதாக 33 பேர் அடையாளம் காணப்பட்டனர். இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த மார்ச் 18 முதல் பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டு வந்த நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் மிகக் குறைந்தளவான பதிவாக காணப்படுகின்றது. இத்துடன் ஒன்ராரியோவில் தொற்றால் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,194 ஆக அதிகரித்தது. எனினும் இவர்களில் 90.7 சதவீதமான 36,456 பேர் குணமடைந்தும் 2786 பேர் இதுவரை உயிரிழந்தும் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அப்பாறைக்கு வழங்கப்பட்டது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், இந்த அறிவிப்பை வெளியிட்டார். நடந்து முடிந்த 9-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அப்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் வெற்றி பெற்றிருக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீமாவிடம் சரணடைந்த இரா.சம்பந்தன்!

1961ம் ஆண்டு தந்தை செல்வாவின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் அரசுக்கான அறவளிப் போராட்டம் நடைபெற்ற போது, அன்றைய ஸ்ரீலங்காவின் அரச அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கீழான அரச இயந்திரம் சில மாதங்களாக முடக்கம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா உட்பட போராட்டக்காரர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு தமிழ் அரசுக் கோரிக்கையை கைவிடுமாறு மிரட்டப்பட்டனர். நோயுற்றிருந்த போதும் தந்தை செல்வா அடிபணிய மறுத்தார். ஆனால் தமிழ் அரசுக் கோரிக்கையை தான் கைவிடுவதாக ஸ்ரீமாவிடம் சரணடைந்த இரா.சம்பந்தன் சிறையில் இருந்து விடுதலையானார். மேலதிக விபரங்களுடன் அரசியல் ஆய்வை வழங்குகின்றார் கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்த ராஜா  2020 தேர்கால அரசியல் ஆய்வு - வரலாற்றுப் பதிவில் இருந்து -