Skip to main content

Posts

Showing posts from November, 2020

1600 புதிய தொற்றுக்களை எட்டியது ஒன்ராறியோ!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா  தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது. பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர். பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் ...

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில் இது அதிகூடிய நாளார்ந்த தொற்றாக மட்டும் அன்றி, நாளார்ந்த அதிகூடிய உயிரிழப்பாக 20 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். பீல்ப் பிராந்தியத்தில் 497 தொற்றாளர்களும், ரொறன்ரோவில் 456 பேரும், யோர்க்கில் 130 பேரும், ஒட்டாவாவில் 130 பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றில் உள்ளடங்குகின்றனர். அதிகரித்துச் செல்லும் நாளார்ந்த தொற்றுக்களில் கடந்த ஏழு நாட்களாக சராசரியாக 1419 தொற்றுக்கள் பதிவாகின்றன. இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,761 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77,241 பேர் குணமடைந்துள்ளதுடன், 3332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒன்ராறியோவில் பீல்ப் பிராந்தியம், ரொறன்ரோ, ஒட்டாவா என்பன ஏற்கனவே சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்வரும் ...

ஆயிரக்கணக்கில் ஒன்ராறியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுத் தொடர்பான 39,165 பரிசோதனைகளில், 1132 நாளார்ந்த புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது ஒன்ராறியோவில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொகையாக அமைந்துள்ளது.  இவற்றில் ரொறன்ரோவில் 336 உம், பீல்ப் பிராந்தியத்தில் 258 உம், யோர்க் பிராந்தியத்தில் 114 உம், ஒட்டாவாவில் 78 உம், ஹோல்ட்டனில் 64 உம், ஹமில்டனில் 55 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர். இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 825 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 85.6 சதவீதமான 70 ஆயிரத்து 938 பேர் குணமடைந்துள்ளதுடன், இன்றைய 11 இழப்புக்களுடன் இதுவரை 3220 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 5,345,001 மொத்தப் பரிசோதனைகளில் 44,572 மாதிரிகள், தற்சமயம் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒன்ராறியோவில் அதிகூடிய நாளார்ந்த கொரோனா தொற்று!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுக் குறித்த 25,279 பரிசோதனைகளில் அதிகப்படியான 1050 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் முதலாக ஒன்ராறியோவில் அடையாளம் காணப்பட்ட நாளார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த ஒக்ரோபர் 25ம் நாள் அடையாளம் காணப்பட்ட 1042 தொற்றாளர்களுக்கு மேலாக இன்று 1050 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை சுமார் ஐம்பதினாயிரம் வரையான பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடிய திறன் மாகாண ஆய்வுகூடங்களில் காணப்படுகின்ற போதும், 25,279 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிந்திய நாளார்ந்த கொரோனா தொற்றாளர்களில் 408 ரொறன்ரோவிலும், பீல்ப் பிராந்தியத்தில் 212 உம், ஹோல்ட்டனில் 86 உம், யோர்க்கில் 76 உம், டர்ரம் பிராந்தியத்தில் 57 உம் உள்ளடங்குகின்றன. இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,705 ஆக உயர்வடைந்தது. இவர்களில் இன்று குணமடைந்த 837 பேருடன் இதுவரை 85.4 சதவீதமான 67,244 பேர் குணமடைந்துள்ளனர்.