Skip to main content

Posts

கல்முனையில் அதிகரிக்கும் கொறோனா தொற்றுக்கள்!

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை முதல்வர் மூத்த சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்று அதிகமாக காணப்படும் சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையிலும், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை,கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொதுமக்களை வீடுகளிலே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கல்முனை மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் அர்சாத்...
Recent posts

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டார்.

  இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.  நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில். அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் உறுப்பினராக கடந்த டிசம்பர் 08ம் நாளன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி  நேற்று புதன்கிழமை முற்பகல் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சுதாமதி சத்தியப் பிரமாணம் செய்தார். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார். நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த சுதாமதி அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேசம் முஸ்ல...

ஈரான் நாட்டு அதிருப்தி ஊடகவியலாளர் Ruhollah Zam -க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு

ஈரானில் வன்முறையைத் தூண்டியதாக அந்நாட்டு உயர் நீதிமன்றால் குற்றம் சுமத்தப்பட்ட ஊடகவியலாளர் Ruhollah Zam தூக்கிலிடப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டது.  2017ல் ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பெரும் எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்டவர் என்று Zam  மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் வசித்து வந்தார்.  Amad News என்ற இணையத் தளத்தை நடத்திவந்த அவர், கடந்த 2019ல் ஈராக்குக்கு பயணம் ஒன்றை மேற்கொண்ட நிலையில், அங்கு கைதாகி ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டார். நேற்றைய தினம் ஈரான் உயர் நீதிமன்றம் Zam-க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனைத்  தீர்ப்பை அறிவித்ததை அடுத்து இன்று மரண தண்டனை  தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்தது. ஊடகவியலாளர் Zam-க்கு மரண தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசு உடனடியான தமது கண்டணத்தை பதிவு செய்துள்ளன. 

1600 புதிய தொற்றுக்களை எட்டியது ஒன்ராறியோ!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா  தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது. பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர். பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் ...

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில் இது அதிகூடிய நாளார்ந்த தொற்றாக மட்டும் அன்றி, நாளார்ந்த அதிகூடிய உயிரிழப்பாக 20 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். பீல்ப் பிராந்தியத்தில் 497 தொற்றாளர்களும், ரொறன்ரோவில் 456 பேரும், யோர்க்கில் 130 பேரும், ஒட்டாவாவில் 130 பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றில் உள்ளடங்குகின்றனர். அதிகரித்துச் செல்லும் நாளார்ந்த தொற்றுக்களில் கடந்த ஏழு நாட்களாக சராசரியாக 1419 தொற்றுக்கள் பதிவாகின்றன. இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,761 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77,241 பேர் குணமடைந்துள்ளதுடன், 3332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒன்ராறியோவில் பீல்ப் பிராந்தியம், ரொறன்ரோ, ஒட்டாவா என்பன ஏற்கனவே சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்வரும் ...

ஆயிரக்கணக்கில் ஒன்ராறியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுத் தொடர்பான 39,165 பரிசோதனைகளில், 1132 நாளார்ந்த புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது ஒன்ராறியோவில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொகையாக அமைந்துள்ளது.  இவற்றில் ரொறன்ரோவில் 336 உம், பீல்ப் பிராந்தியத்தில் 258 உம், யோர்க் பிராந்தியத்தில் 114 உம், ஒட்டாவாவில் 78 உம், ஹோல்ட்டனில் 64 உம், ஹமில்டனில் 55 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர். இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 825 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 85.6 சதவீதமான 70 ஆயிரத்து 938 பேர் குணமடைந்துள்ளதுடன், இன்றைய 11 இழப்புக்களுடன் இதுவரை 3220 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 5,345,001 மொத்தப் பரிசோதனைகளில் 44,572 மாதிரிகள், தற்சமயம் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒன்ராறியோவில் அதிகூடிய நாளார்ந்த கொரோனா தொற்று!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுக் குறித்த 25,279 பரிசோதனைகளில் அதிகப்படியான 1050 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் முதலாக ஒன்ராறியோவில் அடையாளம் காணப்பட்ட நாளார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த ஒக்ரோபர் 25ம் நாள் அடையாளம் காணப்பட்ட 1042 தொற்றாளர்களுக்கு மேலாக இன்று 1050 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை சுமார் ஐம்பதினாயிரம் வரையான பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடிய திறன் மாகாண ஆய்வுகூடங்களில் காணப்படுகின்ற போதும், 25,279 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிந்திய நாளார்ந்த கொரோனா தொற்றாளர்களில் 408 ரொறன்ரோவிலும், பீல்ப் பிராந்தியத்தில் 212 உம், ஹோல்ட்டனில் 86 உம், யோர்க்கில் 76 உம், டர்ரம் பிராந்தியத்தில் 57 உம் உள்ளடங்குகின்றன. இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,705 ஆக உயர்வடைந்தது. இவர்களில் இன்று குணமடைந்த 837 பேருடன் இதுவரை 85.4 சதவீதமான 67,244 பேர் குணமடைந்துள்ளனர்.