கோவிட் 19 - இன்றைய ஒன்ராறியோ
இன்று புதிய தொற்று எண்ணிக்கை 375 எனவும் இறப்பு எண்ணிக்கை 27 எனவும் ஒன்ராறியோ நலத்துறை அறிவித்துள்ளது. நேற்றுப் பதிவான 462 என்ற எண்ணிக்யை விட இன்று குறைவடைந்திருப்பது பாதுகாப் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இதுவரை 1200 பேர் இத்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இத்தொற்றுத் தொடர்பான பரிசோதனையில் 1336 பேர் இருக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 5000க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை ஒன்ராறியோவில் 94 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர்.
இந்த வேகத்தில் தொற்றுப் பரவல் தொடர்ந்தால் ஏப்பிர் மாத இறுதிக்குள் ஒன்ராறியோ மாகாணம் 1600 இறப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடித்தால் மேலும் 200 இறப்புகளுடன் இத்தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இத்தொற்றால் ஒன்ராறியோவில் 3000 முதல் 15000 வரை இறப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் இது ஏறக்குறை 24 மாதங்களுக்குத் தொடரும் வாய்ப்பு எண்டு என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இதுவரை நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களில் 21.3 வீதமானோர் பயணங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். 12.5 வீதமானோர் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். 17.9 வீதமானோருக்குக் காரணம் தெரியவில்லை. 48.9 வீதமானோர் பற்றிய முடிவுகள் வெளிவரவரவில்லை.
Comments
Post a Comment