கோவிட்-19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 6, 5:00 pm
ஒன்ராறியோ மானாணத்தில் இன்று பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 309 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இதுவே மிகக் குறைந்த அதிகரிப்பு ஆகும். இதை விடவும் குறைவான எண்ணிக்iயான 260 மார்ச் 31 அன்று பதிவாகியிருந்தது.
இன்றைய நாளில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாகாணத்தில் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று உறுதிப்பட்ட 589 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளளர். இது நேற்றையை விட 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தால் அதிகரித்து 216 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரு நாட்களில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 46 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைவிட பொதுமக்களிடம் 456 தொற்றுகளும் பணியாளர்களிடையே 289 தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லங்களி;ல இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 56 ஆகும்.

Comments
Post a Comment