Skip to main content

கோவிட்19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 6, 5:00 pm

கோவிட்-19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 6, 5:00 pm


ஒன்ராறியோ மானாணத்தில் இன்று பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 309 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இதுவே மிகக் குறைந்த அதிகரிப்பு ஆகும். இதை விடவும் குறைவான எண்ணிக்iயான 260 மார்ச் 31 அன்று பதிவாகியிருந்தது.

இன்றைய நாளில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  மாகாணத்தில் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று உறுதிப்பட்ட 589 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளளர். இது நேற்றையை விட 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தால் அதிகரித்து 216 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த இரு நாட்களில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 46 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைவிட பொதுமக்களிடம் 456 தொற்றுகளும் பணியாளர்களிடையே 289 தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லங்களி;ல இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 56 ஆகும்.



Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.