ஒன்ராறியோ நலத்துறை அதிகாரிகள் 462 புதிய கோவிட்-19 தொற்றுகளையும் 14 புதிய இறப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் உட்பட ஒன்றாரியோ மாகாணத்தில் மொத்தம் 3,255 பேர் இந் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் வியாழக்கிழமை 401 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன. இன்று 462 ஆக அது அதிகரித்துள்ளது. நாள்தோறுமான அதிகரிப்புகளில் இதுவே மிக அதிகமான அதிகரிப்பாகும்.
ஒன்றாரியோவில் இத்தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,023 ஆக இருக்கும் அதேவேளை இதுவரை 67 பேர் இறந்துள்ளனர் என்றும் நலத்துறை தெரிவித்துள்ளது. இன்று கோவிட் 19 தொற்று தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக 1, 245 பேர் காத்திருக்கின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட 800 ஆல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலத்தில் நாள்தோறும் 6000 பேருக்கு தொற்று தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.
ஒன்றாரியோ முழுவதுமாக 462 பேர் மருத்துவத்துக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 194 பேர் அதிதீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 140 பேர் செயற்கைச் சுவாசத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இத்தொற்று எவ்வாறு பரவிச் செல்கின்றது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை மாகாண நலத்துறை விரைவில் வெளியிடவுள்ளது.
Comments
Post a Comment