Skip to main content

கோவிட் 19 - இன்றைய ஒன்றாரியோ



ஒன்ராறியோ நலத்துறை அதிகாரிகள் 462 புதிய கோவிட்-19 தொற்றுகளையும் 14 புதிய இறப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தொற்றில் இருந்து மீண்ட  நோயாளிகள் உட்பட ஒன்றாரியோ மாகாணத்தில் மொத்தம் 3,255 பேர் இந் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவில் வியாழக்கிழமை 401 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன. இன்று 462 ஆக அது அதிகரித்துள்ளது. நாள்தோறுமான அதிகரிப்புகளில் இதுவே மிக அதிகமான அதிகரிப்பாகும்.

ஒன்றாரியோவில் இத்தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,023 ஆக இருக்கும் அதேவேளை இதுவரை 67 பேர் இறந்துள்ளனர் என்றும் நலத்துறை தெரிவித்துள்ளது. இன்று கோவிட் 19 தொற்று தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக 1, 245 பேர் காத்திருக்கின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட 800 ஆல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலத்தில் நாள்தோறும் 6000 பேருக்கு தொற்று தொடர்பான சோதனை நடத்தப்பட்டது.

ஒன்றாரியோ முழுவதுமாக 462 பேர் மருத்துவத்துக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 194 பேர் அதிதீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 140 பேர் செயற்கைச் சுவாசத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இத்தொற்று எவ்வாறு பரவிச் செல்கின்றது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை மாகாண நலத்துறை விரைவில் வெளியிடவுள்ளது.



Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.