ஒன்ராறியோ மாகாண அரசு இன்று 408 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தோடு மாகாணத்தில் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இறப்பு எண்ணிக்கையும் 25ஆல் அதிகரித்து 119 ஆக உயர்ந்துள்ளது. இது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 3 சதவீதம் ஆகும்.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான 375 விட அதிகமாக இருப்பினும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவானதாகும்.
தற்போது ஒன்ராறியோவில் மொத்தம் 523 பேர் தொற்றுக்; காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 200 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர்.
இது சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவானதாகும்.
இதேவேளை, கொறொனா வைரஸ் தொற்று காரணமாக பரிசோதனை செய்யவேண்டியுள்ளவர்கள் 1000 ஆகக் குறைவடைந்துள்ளது. எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை பதினோராயிரமாகக் காணப்பட்டது.
ஒன்ராறியோவில் இதுவரை 75,000 க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 தொற்றுத் தொடர்பாக சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று 36 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 51.2 விழுக்காட்டினர் ரொறன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Comments
Post a Comment