கோவிட்- 19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 13.
இன்று 17 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு ஒன்றாறியோவில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. இத்தொற்றுக் காரணமாக 760 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 263 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5065 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழைக்குள் இந்த எண்ணிக்கை 8000 மாக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 88 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் ஏற்பட்ட இறப்புகளில் 119 இறப்புகள் இந்த பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டவையாகும்.
இதுவரை 813 நலத்துறைப் பணியாளர்கள் இத்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 53.9 வீதம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

Comments
Post a Comment