
கோவிட் 19- இன்றைய ஒன்ராறியோ ஏப்ரல் 12
ஒன்ராறியோவில் இன்று 401 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தோடு ஒன்ராறியோவில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொகை 7,049ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 21 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதையடுத்து ஒன்ராறியோவில் இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் தொகை 274ஆக அதிகரித்துள்ளர்.
இந்த அதிகரிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் அதிகமாகும். எனினும் கடந்த சில நாட்களை விட அதிகரிப்பு வேகம் குறைந்தே காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில்; 6,844 சோதனைககள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதுவரையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பரிநோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 738 ஆகும். அவசர மருத்துவப் பிரிவில் உள்ள 261 நோயாளிகளில் 196 பேருக்குச் செயற்கைச் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுவரை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நலத்துறைப் பணியாளர்களில் 777 பேருக்கு இத்தொற்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment