Skip to main content

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை வீழ்ச்சி!

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை பெரு வீழ்ச்சி! 

கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 347 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரத்தின் பின் ஏற்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாக இது நோக்கப்படுகின்றது. அதேவேளை 45 இறப்புகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஏப்ரல் 24 அன்று, அதிக உயர்வாக 640 காணப்பட்டது. பின்னர் குறைவடைந்து நேற்று 525 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இன்றைய வீழ்ச்சி மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கின்றது.

ஒன்ராறியோ கோவிட் 19 என்ற கிருமித் தொற்றின் உச்சத்தில் இருந்து இறங்கத் தொடங்கியுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடந்து இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை "சீரான" வீழ்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகே தொற்றுர் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, வணிக நிறுவனங்களைத் திறப்பது தொடர்பாக சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதன்மையான பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளைத் திறப்பதுடன், தொற்றுத் தொடர்பாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவல்ல பணியிடங்களை மீண்டும் திறக்க முனைகின்றோம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

நாளாந்த நோயாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சி, தற்செயலானதாகவும் இருக்கலாம். நமது கணிப்பிலும் தவறுகள் இருக்கலாம். இதனுடைய தொடர் வீழ்ச்சியை உற்று அவதானித்த பின்னரே நாம் தொற்றுப் பரவல் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் செவ்வாயன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மாகாணத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட 15,728 நோயாளர்களில் இதுவரை 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.