
கோவிட்- 19 இன்றைய ஒன்றாரியோ – ஏப்ரல் 17.
ஒன்றாரியோவில் இன்று 564 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தோடு ஒன்றாரியோவில் தொற்றுக்கு உள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 9525 ஆக உயர்ந்துள்ளது. இதில் இறந்தோர், குணமடைந்தோர் எண்ணிக்கையும் உள்ளடங்கும்.
இன்று 55 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு ஒன்றாறியோவில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் ஏறக்குறையப் பாதிப்பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்தோர் ஆவர்.
இத்தொற்றுக் காரணமாக 829 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 245 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை 6000 பேர் பரிசோதனைக்க உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை 4556 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் என்ணிக்கையில் இது 48 வீதமாகும்.
Comments
Post a Comment