கோவிட்- 19 இன்றைய ஒன்றாரியோ – ஏப்ரல் 23. ஒன்றாரியோவில் இன்று 634 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுவரை அறிவிக்கப்பட்ட நாளாந்த உறுதிப்படுத்தல்களில் இதுவே அதிகமாகும்.
இத்தோடு ஒன்றாரியோவில் தொற்றுக்கு உள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 13000த்தைத் நெருங்கியுள்ளது. இதில் இறந்தோர், குணமடைந்தோர் எண்ணிக்கையும் உள்ளடங்கும்.
இன்று 54 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு ஒன்றாறியோவில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 500 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்தோர் ஆவர்.
ஒன்ராறியோவில் இத்தொற்றால் ஏற்பட்ட இறப்புகளில் 38 ஐத் தவிர மற்ற அனைத்துமே 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
குணமடைந்தோர் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை தொடக்கம் 459 அதிகரித்துள்ளது, இது இது குணமடைந்தோர் எண்ணிக்கையில் மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
மாகாண ஆய்வகங்கள் 10,214 பேர் மீது சோதனைகளை மேற்கொண்டன. 6,757 பேரின் சோதனை மாதிரிகள் வியாழக்கிழமை பரிசீலனையில் இருந்தன.
இத்தொற்றுக் காரணமாக ஒன்ராறியோ முழுவதும் இப்போது 233 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர், மேலும் அந்த 185 பேர் செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment