கோவிட் 19 தொடர்பில் ஐயத்துக்குள்ளான அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் கூறியுள்ளார்.
இப்போது நாளொன்றுக்கு 13000 பேரை பரிசோதிக்கும் திறனை மாகாணம் கொண்டுள்ளது. இத்தொற்றுத் தொடர்பில் முன்னரங்கில் பணியாற்றும் நலத்துறைப் பணியாளர், சிறைக்கைதிகள், மூதாளர் இல்லப் பணியாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாகச் இத்தொற்றுத் தொடர்பான சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 3000 வரையான சோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன.
கனடாவில் நாளொன்றுக்கான சோதனைக்குள்ளாவோர் எண்ணிக்கை பிற மாகாணங்களை விடக் குறைவாக இருக்கின்றது எனக் கூறிய முதல்வர் இந்த எண்ணிக்கை நாளை முதல் அதிகரிக்கப்பட வேண்டும் சாக்குகள் கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment