இன்று தொற்று எண்ணிக்கை 525
கடந்த மூன்று நாட்களாகக் குறைவடைந்து சென்ற நாளாந்த தொற்று எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இன்று இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 437 தொற்றுகள் பதிவாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிக உயர்வாக 640 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருந்தன.
கடந்த 3 நாட்களாக எண்ணிக்கை குறைவடைந்து சென்றமை, நோயின் தாக்கம் குறைவடைகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நேற்றையை விட, 88 புதிய தொற்றுகளால் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிக இறப்புகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்றே.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சீராக இருப்பதாகத் தெரிகிறது.
ஐ.சி.யூ யூனிட்களில் கோவிட் -19 உடன் 239 பேர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன, நேற்று இது 241 ஆக இருந்தது. ஏப்ரல் 9 ஆம் திகதி அதிக உயர்வாக 264 அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இத்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் 957 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களை விடவும் சாதாரண பொதுமக்களும் கணிசமான அளவு இத்தொற்றுக் உள்ளாகி வருகின்றனர். அரசு நடைமுறைப்படுத்தும் நேரடி நெருக்க இடைவெளியை முறையாகப் பேணத் தவறுதல், கையுறை, சுவாசத் தடுப்பு, போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தத் தவறுவதுமே காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

Comments
Post a Comment