Skip to main content

ஒன்றாரியோவில் இன்று 89 பேர் இறப்பு - எண்ணிக்கையிலும் உயர்வு

ஒன்றாரியோவில் ஒரே நாளில் 89 பேர் இறப்பு -  எண்ணிக்கையிலும் உயர்வு

ஒன்ராறியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் கோவிட் 19 தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர். இதுவே ஒரு நாளில் நிகழ்ந்த அதிகூடிய இறப்பு எண்ணிக்கையாகும்.

இத்தோடு மொத்தமாக 1082 இறப்புகளை மாகாணம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 459 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கைனயை விட இது அதிகரித்திருக்கின்றது. எனினும் தொற்றின் அதிகரிப்பு வேகம் உச்சநிலையில் இருந்து குறைவடைந்து செல்வதை புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.

இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்ட போதும் தொடர் எண்ணிக்கை அதிகரிப்பில் வீழ்ச்சிப் போக்கினை அவதானிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்கள் 500 க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

ஆறு வாரங்களுக்குக் பின் நோய்த்தொற்றின் உச்சப் பாதிப்பைக் கடந்துவிட்தாக ஒன்றாரியோ அரசு தெரிவித்திருக்கின்றது. நாளொன்றுக்கு 14 ஆயிரம் சோதனைகளை நடத்துவதற்கு அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. புதன்கிழமை இது 12,928 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"நாம் நோயின் உச்சத்தாக்கத்தைக் கடந்து விட்டோம். வழமைக்குத் திரும்பும் காலத்தை நெருங்கி வருகின்றோம். நான் இப்போது வழமைக்குத் திரும்பும் நாட்களை வரையறுத்துக் கூற முடியாது. ஆனால் அந்த நாட்களை நாம் நெருங்கி வருகின்றறோம் என்று உங்களுக்குக் கூற முடியும்." என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.