ஒன்ராறியோவில் இன்று 379 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 21 புதிய இறப்புகளையும் ஒன்ராறியோ பதிவுசெய்துள்ளது.
நேற்று பதிவான தொற்றுகளை விட இது 70 தொற்றுகளால் இன்று அதிகரித்துள்ளது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவான 462 என்ற எண்ணிக்கையை விட இது குறைவானதாகும்.
ஒன்ராறியோவில் இயங்கும் 34 பொது நலத்துறைப் பிரிவுகளால் வழங்கப்பட்ட தகவல்களில் அடிப்படையில் இதுவரை நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 164 எனப் பட்டியலிடப்பட்டாலும் மாகாணம் 153 இறப்புகளையே பட்டியலிட்டுள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் வெவ்வேறு நேரங்களில் பெறப்பட்ட தகவல்களே என்று கூறப்படுகி;னறது.
இதற்கிடையில் மருத்துவமனையில தொற்றுகளால் அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒன்ராறியோவின் மருத்துவமனைகளில் இத்தொற்றால் பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆகும். இவர்களில் 233 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட நான்கு சத வீதத்தால் அதிகரித்துள்ளது.
தற்போது 614 பேர் உள்ளனர், இதில் ஊழுஏஐனு-19 வழக்குகள் உள்ளன, இதில் 233 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 216 பேர் உட்பட 589 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திங்கள்கிழமை முதல் இது நான்கு சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தொற்றுத் தொடர்பான சோதனைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை முன்பை விடக் குறைவடைந்தாலும் நேற்றைய எண்ணிக்கையான 329 விட இன்று 691 ஆக அதிகரித்துள்ளது.
இத்தொற்றுக் தொடர்பாக நீண்டகால பாராமரிப்பு இல்லங்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. 51 பராமரிப்பு இல்லங்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. இறந்தோரில் 69 பேர் இந்த இல்லங்களில் வசித்தோராவர். இன்று வெளியான இறப்பு எண்ணிக்கையில் 13 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களி;ல வாழ்ந்தவர்களே.
இத்தரவுகளுக்கு அமைய இத்தொற்றால் ஒன்ராறியோவில் பாதிக்கப்ப்டட மொத்த நோயாளர் எண்ணிக்கை 4726 ஆக உயர்ந்துள்ளது. இது இறந்தவர்களும் குணமடைந்தவர்களும் அடங்குவர். இதுவரையில் 1802 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.

Comments
Post a Comment