தடுப்பூசி இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் - ஜப்பானிய மருத்து சங்கம்கோவிட்-19 தொற்று நோய்க்குப் பொருத்தமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்காத நிலையில் ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் மருத்துவ சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாடுகளில் யாவற்றிலும் கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த போட்டிகளை நடத்த முடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
பொருத்தமான தடுப்பூசி ஒன்று இல்லாமல் இந்த போட்டிகளை நடத்துவது எளிதாக இருக்கப் போவதில்லை என மருத்துவர் ஜோஸ்ராகே யோகோகுரா(Yoshitake Yokokura) கூறியுள்ளார்.
ஜப்பானில் இதுவரை 13 ஆயிரத்து 576 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு துறைமுகம் ஒன்றில் நிற்கும் ஒரு கப்பலில் மட்டும் 712 நோயாளிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை 389 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் நாடெங்கிலும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நடைபெறவிருந்த ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜூலை 23 வரை ஒத்திவைக்க ஜப்பானும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளமும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
இந்த போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்துவதாக இருப்பினும் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே போட்டிகளை நடத்த முடியும் என தொற்றுநோய்ப் பேராசிரியர் கென்டோரா இவாடா தெரிவித்திருக்கின்றார்.
அடுத்த ஆண்டு இந்த போட்டிகளை நடத்துவதில் பெரும்பாலும் சிரமங்களும் இருக்க போவதில்லை என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான யோசிரோ மேரி(Yoshiro Mori) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டில் போட்டி நடைபெற முடியாத நிலை ஏற்பட்டால், அது 2022 ஆம் ஆண்டுக்குப் பிற்போடப்படுமாவென என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் யோசிரோ மேரி, அந்நாட்டுப் பிரதர் ஷின்சோ அபே, “அடுத்த ஆண்டில் போட்டிகளை நடத்துவது சாத்தியமாகாவிட்டால் அவை இரத்துச் செய்யப்படுமென” பதிலளித்தனர்.
Comments
Post a Comment