Skip to main content

வழமைக்குத் திரும்பியது சீனாவின் வஹான் மாநிலம்


வழமைக்குத் திரும்பியது சீனாவின் வஹான் நகரம் 



கடந்த ஜனவரி 23ம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்த வஹான் நகரம்  பெரிதும் வழமைக்குத் திரும்பியுள்ளது. மக்கள் ஏப்ரல் 7ம் திகதி முதல் பிறவிடங்களுக்குத் தடைகள் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவின் Hubei மாகாணத்தில் உள்ள வஹான் நகரத்திலேயே கோவிட் 19 வைரஸின் தொற்று முதலில் அவதானிக்கப்பட்டது. இத்தொற்று பெருகி மக்களின் உயிர் குடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது. இங்கு 11 மில்லியன் மக்கள் முடக்கப்பட்டிருந்தனர்.

இந்த முடக்கம் மனிதவுரிமைகளுக்கு முரணாகவும் இருந்தது என்று கூறப்பட்டாலும் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அந்த நகரத்தை பெரும் இழப்புகளில் காப்பாற்றியிருக்கின்றது.

இந்நகரத்தில் தொற்று பரவும் நிலை கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து வணிக நிறுவனங்களும் பேரங்காடிகளும் திறக்கப்பட்டிருந்தன. எனினும் மக்கள் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஒரு வாரத்தில் இத்தொற்று எங்கும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதையடுத்து வஹான் நகர மக்கள் பிற இடங்களுக்குச் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசிகள் தரவிறக்கப்பட்டிருக்கும் நலத்துறைச் செயலி அதைக் கொண்டிருப்பவர் தொடர்பில் பச்சை சைகை கொண்டதாக இருக்க வேண்டும். இது முற்றிலும் நலம் மிக்கவர்கள் என்பதைக் குறிக்கும். இவர்களே வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல் வஹான் விமான நிலையத்தில் இருந்து 200 விமானங்கள் பறக்கவுள்ளன. இதில் 10000 பேர் பயணம் செய்யவுள்ளனர்.

எனினும் பெய்ஜிங் உட்பட பல மாகாணங்களி; இத்தொற்று குறைந்தளவில் பரவி வருகின்றது. அங்கு கட்டுமையான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.