ஈழவிடுதலைக்காக ஜனநாயக வழியில் அறவளிப் போராட்டத்தை மேற்கொண்டு உயரீகம் செய்த நாட்டுப்பற்றாளர் தியாகி அன்னை பூபதியின் 32-வது ஆண்டு நினைவேந்தல் , இன்று அமைதியான முறையில் நினைவு கூரப்படுகிறது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால், தமிழகர் தாயகப்பகுதிகளில் மட்டும் அன்றி, புலம்பெயர் தேசமெங்கும் மக்கள் இன்னலுறும் நிலையிலும், தியாகி பூபதி அம்மா அமைதியான முறையில் நினைவு கூரப்படுகின்றார்.
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கும் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் இன்று அமைதியான முறையில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
அவ்வாறே தாயகத்தில் மட்டும் அன்றி புலம் பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது இல்லங்களில் அமைதியான முறையில் ஈகைச் சுடரேற்றி, அமைதி வணக்கம் செலுத்தி தியாகி பூபதி அம்மாவை நினைவு கூர்ந்தனர்.
1988ம் ஆண்டு மட்டக்களப்பு அன்னையர் முன்னணியினர் இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகள் முறிந்துபோக, சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.
உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், இந்திய அதிகாரிகளுடனான பேச்சுக்கள் நன்மை பயக்கவில்லை.
1988ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி மட்டகளப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றிழழில் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தியாகி பூபதி அம்மா தனது அறவளிப் போராட்டம் ஆரம்பித்தார்.
அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், 1988ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் அவர் உயிர்நீத்தார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால், தமிழகர் தாயகப்பகுதிகளில் மட்டும் அன்றி, புலம்பெயர் தேசமெங்கும் மக்கள் இன்னலுறும் நிலையிலும், தியாகி பூபதி அம்மா அமைதியான முறையில் நினைவு கூரப்படுகின்றார்.
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கும் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் இன்று அமைதியான முறையில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
அவ்வாறே தாயகத்தில் மட்டும் அன்றி புலம் பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது இல்லங்களில் அமைதியான முறையில் ஈகைச் சுடரேற்றி, அமைதி வணக்கம் செலுத்தி தியாகி பூபதி அம்மாவை நினைவு கூர்ந்தனர்.
1988ம் ஆண்டு மட்டக்களப்பு அன்னையர் முன்னணியினர் இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகள் முறிந்துபோக, சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.
உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், இந்திய அதிகாரிகளுடனான பேச்சுக்கள் நன்மை பயக்கவில்லை.
1988ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி மட்டகளப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றிழழில் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தியாகி பூபதி அம்மா தனது அறவளிப் போராட்டம் ஆரம்பித்தார்.
அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், 1988ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் அவர் உயிர்நீத்தார்.

Comments
Post a Comment