Skip to main content

தியாகி அன்னை பூபதியின் 32-வது ஆண்டு நினைவேந்தல்

ஈழவிடுதலைக்காக ஜனநாயக வழியில் அறவளிப் போராட்டத்தை மேற்கொண்டு உயரீகம் செய்த நாட்டுப்பற்றாளர் தியாகி அன்னை பூபதியின் 32-வது ஆண்டு நினைவேந்தல் , இன்று அமைதியான முறையில் நினைவு கூரப்படுகிறது.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால், தமிழகர் தாயகப்பகுதிகளில் மட்டும் அன்றி, புலம்பெயர் தேசமெங்கும் மக்கள் இன்னலுறும் நிலையிலும், தியாகி பூபதி அம்மா அமைதியான முறையில் நினைவு கூரப்படுகின்றார்.

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கும் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் இன்று அமைதியான முறையில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

அவ்வாறே தாயகத்தில் மட்டும் அன்றி புலம் பெயர் தேசமெங்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது இல்லங்களில் அமைதியான முறையில் ஈகைச் சுடரேற்றி, அமைதி வணக்கம் செலுத்தி தியாகி பூபதி அம்மாவை நினைவு கூர்ந்தனர்.

1988ம் ஆண்டு மட்டக்களப்பு அன்னையர் முன்னணியினர் இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகள் முறிந்துபோக, சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், இந்திய அதிகாரிகளுடனான பேச்சுக்கள் நன்மை பயக்கவில்லை.

1988ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி மட்டகளப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றிழழில் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தியாகி பூபதி அம்மா தனது அறவளிப் போராட்டம் ஆரம்பித்தார்.
அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், 1988ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் அவர் உயிர்நீத்தார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.