மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கனடிய உலங்குவானூர்தியில் இருந்து முதலாவது கனடியப் படைத்துறையைச் சேர்ந்த துணை லெப்டினன் தர பெண் அதிகாரி Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் நடவடிக்கை ஒன்றில் கிறேக்கத்திற்கும், இத்தாலிக்கும் இடையில் HMCS Fredericton என்ற கனேடிய கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இயங்கிய வான்படையின் புதிய CH-148 Cyclone ரக உலங்குவானூர்தியின் தொடர்பு நேற்றிரவு துண்டிக்கப்பட்ட நிலையில், இது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் குறித்த வானூர்தி கடலில் வீழ்ந்து நொருங்கியதாகவும், அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைந்து தேடுதலை மேற்கொண்ட கனேடிய, இத்தாலிய, துருக்கிய கடற்படைக் கப்பல்கள் ஒரு உடலத்தை மீட்டுள்ளதுடன், அது Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் என்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் ஏனைய உடலங்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்படுகிறது .
இந்த விபத்தில் ஆறு கனடியப் படையதிகாரிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கனடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜன், தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக கூறினார்.
அவ்வாறே இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு வீரர்களையும் போர் வீரர்களாக நினைவு கூர்ந்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இந்த விபத்துத் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் நடவடிக்கை ஒன்றில் கிறேக்கத்திற்கும், இத்தாலிக்கும் இடையில் HMCS Fredericton என்ற கனேடிய கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இயங்கிய வான்படையின் புதிய CH-148 Cyclone ரக உலங்குவானூர்தியின் தொடர்பு நேற்றிரவு துண்டிக்கப்பட்ட நிலையில், இது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் குறித்த வானூர்தி கடலில் வீழ்ந்து நொருங்கியதாகவும், அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைந்து தேடுதலை மேற்கொண்ட கனேடிய, இத்தாலிய, துருக்கிய கடற்படைக் கப்பல்கள் ஒரு உடலத்தை மீட்டுள்ளதுடன், அது Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் என்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
| Pic from FB Sub-Lt. Abbigail Cowbrough |
இந்நிலையில் தொடர்ந்தும் ஏனைய உடலங்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்படுகிறது .
இந்த விபத்தில் ஆறு கனடியப் படையதிகாரிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கனடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜன், தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக கூறினார்.
அவ்வாறே இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு வீரர்களையும் போர் வீரர்களாக நினைவு கூர்ந்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இந்த விபத்துத் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.




Comments
Post a Comment