Skip to main content

கனடாவில் கொறொனா வைரஸ் தொற்று 10,000 ஐக் கடந்தது

கனடாவில் கோவிட் 19 கொறோனா வைரஸ் பரம்பலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் 90 சதவீதமான கனேடியர்கள் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை தொடர்வதை 44 சதவீதமானவர்களும், சுகாதாரத்துறையால் கையாளக்கூடிய அளவுக்கு நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அதை ஆதரிப்பதாக 46 சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டுமென பத்துச் சதவீதமானவர்களும், வழமை நிலை திரும்பவேண்டுமென மூன்று சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.

65 சதவீதமானவர்கள் உடல்நல பாதிப்புக் குறித்தும், 24 சதவீதமானவர்கள் பொருளாதார பாதிப்புக் குறித்தும் கவலைகொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.

இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஏப்ரல் 02ம் நாள் சுமார் பத்தாயிரத்தை கடந்துள்ளது.

இன்று 11 மணிவரையான கனடிய புள்ளிவிபரத் தகவலின் பிரகாரம், 10 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அத்துடன் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 131 என்றும், இவற்றில் ஒன்றாரியோவில் 53 உயிரிழந்துள்ளனர். மற்றும் ஒன்டாரியோவில் 2793 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 831 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1528 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆகக் கூடுதலாக குபெக்கில் 4,611 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 33 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

அவ்வாறே பிரிட்டிஸ் கொலம்பியாவில், 1066 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.