கனடாவில் கோவிட் 19 கொறோனா வைரஸ் பரம்பலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் 90 சதவீதமான கனேடியர்கள் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை தொடர்வதை 44 சதவீதமானவர்களும், சுகாதாரத்துறையால் கையாளக்கூடிய அளவுக்கு நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அதை ஆதரிப்பதாக 46 சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டுமென பத்துச் சதவீதமானவர்களும், வழமை நிலை திரும்பவேண்டுமென மூன்று சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.
65 சதவீதமானவர்கள் உடல்நல பாதிப்புக் குறித்தும், 24 சதவீதமானவர்கள் பொருளாதார பாதிப்புக் குறித்தும் கவலைகொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஏப்ரல் 02ம் நாள் சுமார் பத்தாயிரத்தை கடந்துள்ளது.
இன்று 11 மணிவரையான கனடிய புள்ளிவிபரத் தகவலின் பிரகாரம், 10 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அத்துடன் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 131 என்றும், இவற்றில் ஒன்றாரியோவில் 53 உயிரிழந்துள்ளனர். மற்றும் ஒன்டாரியோவில் 2793 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 831 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1528 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆகக் கூடுதலாக குபெக்கில் 4,611 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 33 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
அவ்வாறே பிரிட்டிஸ் கொலம்பியாவில், 1066 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை தொடர்வதை 44 சதவீதமானவர்களும், சுகாதாரத்துறையால் கையாளக்கூடிய அளவுக்கு நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அதை ஆதரிப்பதாக 46 சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டுமென பத்துச் சதவீதமானவர்களும், வழமை நிலை திரும்பவேண்டுமென மூன்று சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.
65 சதவீதமானவர்கள் உடல்நல பாதிப்புக் குறித்தும், 24 சதவீதமானவர்கள் பொருளாதார பாதிப்புக் குறித்தும் கவலைகொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஏப்ரல் 02ம் நாள் சுமார் பத்தாயிரத்தை கடந்துள்ளது.
இன்று 11 மணிவரையான கனடிய புள்ளிவிபரத் தகவலின் பிரகாரம், 10 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அத்துடன் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 131 என்றும், இவற்றில் ஒன்றாரியோவில் 53 உயிரிழந்துள்ளனர். மற்றும் ஒன்டாரியோவில் 2793 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 831 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1528 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆகக் கூடுதலாக குபெக்கில் 4,611 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 33 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
அவ்வாறே பிரிட்டிஸ் கொலம்பியாவில், 1066 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

Comments
Post a Comment