Skip to main content

கோவிட்-19: ஐம்பதினாயிரத்தைக் கடந்தது கனடா

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஐம்பதினாயிரத்தைக் கடந்துள்ள போதும், தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று செவ்வாய்கிழமை(ஏப்ரல் 29) இரவு வரை கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,026 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2,859 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19231 பேர் குணமடைந்துள்ளனர்.

கனடாவில் ஏற்பட்டுள்ள தொற்றில் 80 சதவீதமானது குபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் ஏற்பட்ட தொற்றாகும். இவற்றில் 79 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளவை.

குபெக்கில் 25757 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மரணமானவர்களின் எண்ணிக்கை 1682 ஆக அதிகரித்துள்ளது.

ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய 525 தொற்றுக்களுடன் 15,381 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் இன்றைய 59 இழப்புக்களுடன் மரணமானோரின் எண்ணிக்கை 951 ஆகவும் அதிகரித்துள்ளன.

அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் முறையே 4850 உம் 2053 என்ற எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன், இவற்றில் ஏற்பட்டுள்ள மரணங்கள் முறையே 80 உம் 105 ஆகவும்; காணப்படுகின்றது.

எனினும், கனடாவில் கொறோனா நுண்மித் தொற்றுப் பரவல் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் கூறியுள்ளார்.

கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அறிமுகம் செய்யப்பட்ட சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட மருத்துவு அறிவுரைகளை கனடியர்கள் பேணுவதன் ஊடாக நோய்த் தொற்றை அரைப்பங்காகக் குறைக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.