கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஐம்பதினாயிரத்தைக் கடந்துள்ள போதும், தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்கிழமை(ஏப்ரல் 29) இரவு வரை கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,026 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2,859 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19231 பேர் குணமடைந்துள்ளனர்.
கனடாவில் ஏற்பட்டுள்ள தொற்றில் 80 சதவீதமானது குபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் ஏற்பட்ட தொற்றாகும். இவற்றில் 79 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளவை.
குபெக்கில் 25757 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மரணமானவர்களின் எண்ணிக்கை 1682 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய 525 தொற்றுக்களுடன் 15,381 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் இன்றைய 59 இழப்புக்களுடன் மரணமானோரின் எண்ணிக்கை 951 ஆகவும் அதிகரித்துள்ளன.
அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் முறையே 4850 உம் 2053 என்ற எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன், இவற்றில் ஏற்பட்டுள்ள மரணங்கள் முறையே 80 உம் 105 ஆகவும்; காணப்படுகின்றது.
எனினும், கனடாவில் கொறோனா நுண்மித் தொற்றுப் பரவல் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் கூறியுள்ளார்.
கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அறிமுகம் செய்யப்பட்ட சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட மருத்துவு அறிவுரைகளை கனடியர்கள் பேணுவதன் ஊடாக நோய்த் தொற்றை அரைப்பங்காகக் குறைக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை(ஏப்ரல் 29) இரவு வரை கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,026 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2,859 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19231 பேர் குணமடைந்துள்ளனர்.
கனடாவில் ஏற்பட்டுள்ள தொற்றில் 80 சதவீதமானது குபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் ஏற்பட்ட தொற்றாகும். இவற்றில் 79 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளவை.
குபெக்கில் 25757 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மரணமானவர்களின் எண்ணிக்கை 1682 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய 525 தொற்றுக்களுடன் 15,381 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் இன்றைய 59 இழப்புக்களுடன் மரணமானோரின் எண்ணிக்கை 951 ஆகவும் அதிகரித்துள்ளன.
அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் முறையே 4850 உம் 2053 என்ற எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன், இவற்றில் ஏற்பட்டுள்ள மரணங்கள் முறையே 80 உம் 105 ஆகவும்; காணப்படுகின்றது.
எனினும், கனடாவில் கொறோனா நுண்மித் தொற்றுப் பரவல் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் கூறியுள்ளார்.
கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அறிமுகம் செய்யப்பட்ட சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட மருத்துவு அறிவுரைகளை கனடியர்கள் பேணுவதன் ஊடாக நோய்த் தொற்றை அரைப்பங்காகக் குறைக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



Comments
Post a Comment