மத்திய அரசின் அவசர நிதியைப் பெற முதல் நாளில் ஆறரை இலட்சம் விண்ணப்பங்கள்.
கோவிட்-19 கொறோனா வைரஸ் காரணமாக வருமானம் இழந்தோருக்கான மத்திய அரசின் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று ஏப்ரல் 06ம் நாள் காலை ஆறு மணி முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் நாளில் பிற்பகல் வரையான தகவலின் பிரகாரம் சுமார் ஆறு இலட்சத்து நாற்பத்தையாயிரத்துக்கும்(6,40,000) மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி ஊடாகவும் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கனடா வருமானவரித் முகவரகத்தின் இணையத்தளத்தில் MY CRA
கணக்கொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக அல்லது, 1-800-959-2019 என்ற கட்டணமற்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மக்கள் இந்தக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கின்னறனர்.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளிலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளிலும், ஜூலை, ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளிலும், இறுதி நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாவைப் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஐந்தாயிரம் டொலரை வருமானமாக பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது கடந்த இரண்டு வாரங்களில் வேலை வாய்ப்பை இழந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்;கப்பட்டுள்ளது.
நேரடி வங்கி வைப்புக்கு விண்ணப்பிப்போருக்கு ஐந்து நாட்களுக்குள் வைப்பிலிடப்படும் என்றும், ஏனையோருக்கு 10 நாட்களுக்குள் காசோலைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறோனா வைரஸ் காரணமாக வருமானம் இழந்தோருக்கான மத்திய அரசின் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று ஏப்ரல் 06ம் நாள் காலை ஆறு மணி முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் நாளில் பிற்பகல் வரையான தகவலின் பிரகாரம் சுமார் ஆறு இலட்சத்து நாற்பத்தையாயிரத்துக்கும்(6,40,000) மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி ஊடாகவும் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கனடா வருமானவரித் முகவரகத்தின் இணையத்தளத்தில் MY CRA
ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளிலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளிலும், ஜூலை, ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளிலும், இறுதி நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாவைப் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஐந்தாயிரம் டொலரை வருமானமாக பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது கடந்த இரண்டு வாரங்களில் வேலை வாய்ப்பை இழந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்;கப்பட்டுள்ளது.
நேரடி வங்கி வைப்புக்கு விண்ணப்பிப்போருக்கு ஐந்து நாட்களுக்குள் வைப்பிலிடப்படும் என்றும், ஏனையோருக்கு 10 நாட்களுக்குள் காசோலைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment