கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 48500 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 2707 பேர் மரணித்துள்ளதுடன், 18281 பேர் குணமடைந்துள்னர்.
குபெக் மாகாணத்தில் கொறோனா நுண்மித் தொற்றுக்கள் 24982 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 1599 பேர் மரணித்துள்ளதுடன், 5517 பேர் குணமடைந்துள்ளனர்.
அடுத்தாக, ஒன்றாரியோவில் இன்று(ஏப்ரல் 27) புதிதாக 424 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14856 ஆக உயர்வடைந்தது.

இவர்களில் 892 மரணத்துள்ளதுடன், 8526 பேர் குணமடைந்துள்ளனர்.
அடுத்தாக அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணங்களில் முறையே 4696, 1998 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முiறேய 75, 103 ஆக காணப்படுகிறது.
இதேவேளை ஒன்றாரியோ மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான மூன்று கட்டத் திட்டத்தை முதல்வர் டக் ஃபோர்ட் இன்று வெளியிட்டார்.
இரண்டு தொடக்கம் நான்கு வார காலப்பகுதியில் நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்த பின்னர் முதற் கட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
முதற் கட்டத்தில் பூங்காக்கள் போன்ற சில பொது இடங்கள் திறக்கப்படுவதுடன், அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாவதுடன், சில பணியிடங்களும் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கும்.
அடுத்ததாக, இரண்டாம் கட்டத்தில் மேலதிக அலுவலகங்கள், சேவை நிலையங்கள் போன்ற மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.
இறுதியாக மூன்றாம் கட்டத்தில், மிகுதியாகவுள்ள ஏனைய தொழிற்துறைப் பணியிடங்கள் பொறுப்புள்ள வகையில் திறக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இருந்த போதும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இசை நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை குபெக் மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகள் குறி;த்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அவ்வாறே ஏனைய மாகாணங்களதும், பிரதேசங்களதும் திட்டவரைபுகள் வெளியாகவுள்ளன.


Comments
Post a Comment