Skip to main content

கோவிட்-19 : உலக சுகாதார நிறுவனத்தை விட முன்னிலை மருத்துவத்துறையை நம்பும் கனடியர்கள்.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று விடயத்தில் கனடியர்கள் தமது குடும்ப மருத்துவர் உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களின் ஆலோசனையையே கூடுதலாக நம்புவதாக கருத்துக் கணிப்பொன்று வெளியாகியுள்ளது.


Leger என்ற கருத்துக்கணிப்பு நிறுவகமும், கனடியர்களின் கல்வித்துறை சார்ந்து இயங்கும்
The Association for Canadian Studies என்ற இலாபநோக்கற்ற நிறுவகமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

கொறோனா நுண்மித் தொற்று விடயத்தில் கனடியர்கள் முன்னிலைப் பணியாளர்களான மருத்துவர்களையும், தாதிகளையும் 92 சதவீம் நம்புவதாகவும், பொதுச் சுகாதார அதிகாரிகளை நம்புவோரின் அளவு 81 சதவீதமெனவும்,

கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார மருத்துவர் தெரீசா ராமை (Theresa Tam) நம்புவோர் 72 சதவீதமெனவும் கருத்துக் கணிப்பு காட்டுகின்றது.

உலக சுகாதார அமைப்பு(WHO- The World Health Organization) மீது 68 சதவீதமானவர்களும், கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது 54 சதவீதமானவர்களும் நம்பிக்கை கொண்டிருப்பதாக இக்கருத்துக் கணிப்பின் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சீனாவின் வூஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொறோனா நுண்மித் தொற்று. இன்று 210 நாடுகளைக் கடந்து, அனைத்துலக ரீதியான அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தொற்றாக மாற்றமடைந்துள்ளது.

இந்த விடயத்தை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம், குறிப்பாக அனைத்துலக ரீதியாக விழிப்புணர்வைக் கொண்டு வந்த விதத்தில் மக்கள் ஏமாற்றத்தை அடைந்துள்ளதுடன், விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, கோவிட்-19 தொடர்பில் செய்திகளையும், துறைசார் மேம்பாட்டாளர்களின் அறிவுரைகளையும் வழங்கிவரும் ஊடகங்கள் மீதான நம்பிக்கை 50 சதவீதமாக இருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புக் காட்டுகிறது.

இந்தப் புள்ளிவிபரங்கள் ஆச்சரியமளிக்கவில்லையெனவும், தமக்கு நெருக்கமானவர்களையே மக்கள் நம்புவது வழமையெனவும் கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி Christian Bourque தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.