Skip to main content

ரொறண்டோ பியர்சன் விமானநிலையத்தில் 3 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

ரொறண்டோ பியர்சன் விமானநிலையத்தில் எல்லை சேவைகள் பிரிவினரால் 3 மில்லியன் 82 ஆயிரம் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
 கடந்த மார்ச் 21ம் நாள் முதல் 29ம் நாள் வரையான ஒருவார காலப்பகுதியில் பிரத்தியேகமான மூன்று சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதாக கனடிய எல்லை சேவைகள் பிரிவும், ஆர்சீஎம்பி காவற்துறையும் தெரிவித்துள்ளது.

ஜமெக்காவின் மொன்ரீகோ வேயில் (Montego Bay ) இருந்து ரொறண்டோ சென்ற இரண்டு வணிக வானூர்திகளி;ல் மற்றும் மெக்சிக்கோவில் இருந்து சென்ற ஒரு வணிக வானூர்தி ஆகியவற்றில் இருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியாக 25 கிலோகிராம் கொக்கேயின் மற்றும் 82 ஆயிரம் டொலர் பெறுமதியான 4.1 கிலோ ஹாஸ்னிஸ் எனப்படும் ஒரு வகை கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பிலும், இதற்குப் பின்புலமாக உள்ள நபர்கள் மற்றும் குழுவினர் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக கனடிய எல்லை சேவைகள் பிரிவும், ஆர்சீஎம்யியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.