ரொறண்டோ பியர்சன் விமானநிலையத்தில் எல்லை சேவைகள் பிரிவினரால் 3 மில்லியன் 82 ஆயிரம் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.கடந்த மார்ச் 21ம் நாள் முதல் 29ம் நாள் வரையான ஒருவார காலப்பகுதியில் பிரத்தியேகமான மூன்று சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதாக கனடிய எல்லை சேவைகள் பிரிவும், ஆர்சீஎம்பி காவற்துறையும் தெரிவித்துள்ளது.
ஜமெக்காவின் மொன்ரீகோ வேயில் (Montego Bay ) இருந்து ரொறண்டோ சென்ற இரண்டு வணிக வானூர்திகளி;ல் மற்றும் மெக்சிக்கோவில் இருந்து சென்ற ஒரு வணிக வானூர்தி ஆகியவற்றில் இருந்து 3 மில்லியன் டொலர் பெறுமதியாக 25 கிலோகிராம் கொக்கேயின் மற்றும் 82 ஆயிரம் டொலர் பெறுமதியான 4.1 கிலோ ஹாஸ்னிஸ் எனப்படும் ஒரு வகை கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பிலும், இதற்குப் பின்புலமாக உள்ள நபர்கள் மற்றும் குழுவினர் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக கனடிய எல்லை சேவைகள் பிரிவும், ஆர்சீஎம்யியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment