
ரொரான்ரோ மாநகரசபை 1900 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கிறது
இந்தப் பாதிப்பு அரச நிர்வாக மட்டங்களையும் அசைக்க ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. மாநகரசபை கடந்த நான்கு வாரங்களில் பிறகு ஒன்றரை பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்வது அல்லது விடுமுறையில் அனுப்புவது என்ற முடிவை ரொரொன்ரோ மாநகரசபை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநகரசபை தொழிற்சங்கம் 79 மற்றும் 416 என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்கிறது.
அடுத்தவாரம் முதல் பதவி நீக்கம் செய்யப்படும் இவர்கள் மீண்டும் சூழல் வழமைக்கு திரும்புகிற போது படிப்படியாகப் பதவிக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 500 பணியாளர்கள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கும் 311 பேர் அழைப்பு மையங்களுக்கும் மாற்றிவிடப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment