Skip to main content

COVID 19 - இன்றைய ஒன்ராறியோ ஏப்பிரல் 8.



இன்றைய ஒன்ராறியோ ஏப்பிரல் 8.  3:30pm 



ஒன்ராறியோவில் இன்று புதிய கோவிட் 19 தொற்று எண்ணிக்கை 550 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடிய எண்ணிக்கை இதுவாகும். இதற்கு ஏப்ரல் 4ம் திகதி 462 என்ற எண்ணிக்கையே ஒருநாளில் ஏற்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இதையடுத்து மாகாணத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5276 ஆக அதிகரித்துள்ளது.

திங்களன்று இந்த எண்ணிக்கை 309 எனக் குறைவடைந்தையடுத்து, சற்றே ஆறுதல் மனநிலை அனைவருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்றைய அதிகரிப்பு பலமான எச்சரிகையை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எண்ணிக்கை குறைவடைகின்றது என்பதால் நாம் எமது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகயில் இருந்து பின்வாங்க முடியாது. என ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

மாகாணத்தில் இன்று இத்தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 21 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு மாகாணத்தில் ஏற்பட்ட மொத்த இறப்பு 194 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இத்தொற்றுக்கான பரிசோதனைக்காகக் காத்திருப்போர் தொகையும் அதிகரித்திருக்கின்றது. நேற்று 309 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1102 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையை விட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் தொகை குறைவடைந்துள்ளது என்றாலும் தீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்மோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.