Skip to main content

COVID 19 - இன்றைய ஒன்ராறியோ ஏப்பிரல் 8.



இன்றைய ஒன்ராறியோ ஏப்பிரல் 8.  3:30pm 



ஒன்ராறியோவில் இன்று புதிய கோவிட் 19 தொற்று எண்ணிக்கை 550 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடிய எண்ணிக்கை இதுவாகும். இதற்கு ஏப்ரல் 4ம் திகதி 462 என்ற எண்ணிக்கையே ஒருநாளில் ஏற்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இதையடுத்து மாகாணத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5276 ஆக அதிகரித்துள்ளது.

திங்களன்று இந்த எண்ணிக்கை 309 எனக் குறைவடைந்தையடுத்து, சற்றே ஆறுதல் மனநிலை அனைவருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்றைய அதிகரிப்பு பலமான எச்சரிகையை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எண்ணிக்கை குறைவடைகின்றது என்பதால் நாம் எமது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகயில் இருந்து பின்வாங்க முடியாது. என ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

மாகாணத்தில் இன்று இத்தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 21 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு மாகாணத்தில் ஏற்பட்ட மொத்த இறப்பு 194 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இத்தொற்றுக்கான பரிசோதனைக்காகக் காத்திருப்போர் தொகையும் அதிகரித்திருக்கின்றது. நேற்று 309 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1102 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையை விட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் தொகை குறைவடைந்துள்ளது என்றாலும் தீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்மோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...