இன்றைய ஒன்ராறியோ ஏப்பிரல் 8. 3:30pm
ஒன்ராறியோவில் இன்று புதிய கோவிட் 19 தொற்று எண்ணிக்கை 550 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடிய எண்ணிக்கை இதுவாகும். இதற்கு ஏப்ரல் 4ம் திகதி 462 என்ற எண்ணிக்கையே ஒருநாளில் ஏற்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இதையடுத்து மாகாணத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5276 ஆக அதிகரித்துள்ளது.
திங்களன்று இந்த எண்ணிக்கை 309 எனக் குறைவடைந்தையடுத்து, சற்றே ஆறுதல் மனநிலை அனைவருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்றைய அதிகரிப்பு பலமான எச்சரிகையை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கின்றது.
எண்ணிக்கை குறைவடைகின்றது என்பதால் நாம் எமது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகயில் இருந்து பின்வாங்க முடியாது. என ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.
மாகாணத்தில் இன்று இத்தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 21 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு மாகாணத்தில் ஏற்பட்ட மொத்த இறப்பு 194 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இத்தொற்றுக்கான பரிசோதனைக்காகக் காத்திருப்போர் தொகையும் அதிகரித்திருக்கின்றது. நேற்று 309 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1102 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையை விட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் தொகை குறைவடைந்துள்ளது என்றாலும் தீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்மோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment