சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 கொறோனா நுண்மித்(வைரஸ்) தாக்கம் இனம், மதம், சாதி. மொழி கடந்து 210க்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்றுக்களையும் மரணங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
இன்று ஏப்ரல் 17 வரை அனைத்துலகரீதியாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், 2.2 மில்லியன் மக்களை தொற்றுக்குள்ளாக்கியுள்ளது. இவர்களில் 571,888 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த கொறோனா நுண்மித் தாக்கம் ஆபிரிக்க நாடுகளை தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆபிரிக்காவில் தற்போது சுமார் 18,000 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 1000 பேர் வரை மரணித்துள்ளனர்.
கோறொனா நுண்மித் தொற்றுக்குள்ளாகிய நாடுகளின் வரிசையில், பிந்தியதாக காணப்பட்டாலும், தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
ஆபிரிக்காவில் மூன்று இலட்சம் முதல் 3.3 மில்லியன் மக்கள் வரை இத்தொற்றுக் காரணமாக உயிரிழக்கக் கூடுமென லண்டனில் உள்ள இம்பீரியல் கொலிஜ்ஜின் (Imperial College London) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடுகளில் கோவிட்-19 தொற்று ஏற்படுமாக இருந்தால், அதன் விளைவு சீனாவில் ஏற்படுத்திய விளைவுகளை விட அதிகமாக இருக்கும் என்று மைக்றோ சொப்டின் இணை நிறுவுனர் பில் கேட்ஸ், பெப்ரவரியில் எச்சரித்திருந்தார்.
கோவிட்-19 தொற்று நாடுகளில் ஏற்படுத்திய மரணம், பாதிப்புக்களின் வரிசையில் அமெரிக்காவில் 710,021 தொற்றுக்களும், 37,158 மரணங்களும், ஸ்பெயினில் 190,839 தொற்றுக்களும், 20,002 மரணங்களும், இத்தாலியில் 172,434 தொற்றுக்களும், 22,745 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அடுத்த படியாக பிரான்ஸில் 147,969 தொற்றுக்களும், 18,681 மரணங்களும், ஜேர்மனியில் 141,397 தொற்றுக்களும், 4352 மரணங்களும், பிரித்தானியாவில் 108,692 தொற்றுக்களும், 14,576 மரணங்களும் பதிவாகியுள்ளன.
சீனாவில் இதுவரை 82,719 தொற்றுக்களும், 4636 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கனடாவில் இதுவரை 31,927 தொற்றுக்களும், 1366 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை, சீனாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஆரம்பமாகியதாகக் கருதப்படும் வூஹானில், இந்த தொற்றுக் காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விடச் சுமார் ஐம்பது சதவீதம் அதிகமானதென அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
வூஹானில் மரணமானவர்களின் எண்ணிக்கை 1290 ஆல் அதிகரித்து 3,869 ஆக உயர்வடைந்துள்ளதென அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதையடுத்துச் சீனாவில் மரணமானவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக அதிகரித்துள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஏப்ரல் 17 வரை அனைத்துலகரீதியாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், 2.2 மில்லியன் மக்களை தொற்றுக்குள்ளாக்கியுள்ளது. இவர்களில் 571,888 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த கொறோனா நுண்மித் தாக்கம் ஆபிரிக்க நாடுகளை தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆபிரிக்காவில் தற்போது சுமார் 18,000 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 1000 பேர் வரை மரணித்துள்ளனர்.
கோறொனா நுண்மித் தொற்றுக்குள்ளாகிய நாடுகளின் வரிசையில், பிந்தியதாக காணப்பட்டாலும், தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
ஆபிரிக்காவில் மூன்று இலட்சம் முதல் 3.3 மில்லியன் மக்கள் வரை இத்தொற்றுக் காரணமாக உயிரிழக்கக் கூடுமென லண்டனில் உள்ள இம்பீரியல் கொலிஜ்ஜின் (Imperial College London) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடுகளில் கோவிட்-19 தொற்று ஏற்படுமாக இருந்தால், அதன் விளைவு சீனாவில் ஏற்படுத்திய விளைவுகளை விட அதிகமாக இருக்கும் என்று மைக்றோ சொப்டின் இணை நிறுவுனர் பில் கேட்ஸ், பெப்ரவரியில் எச்சரித்திருந்தார்.
கோவிட்-19 தொற்று நாடுகளில் ஏற்படுத்திய மரணம், பாதிப்புக்களின் வரிசையில் அமெரிக்காவில் 710,021 தொற்றுக்களும், 37,158 மரணங்களும், ஸ்பெயினில் 190,839 தொற்றுக்களும், 20,002 மரணங்களும், இத்தாலியில் 172,434 தொற்றுக்களும், 22,745 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அடுத்த படியாக பிரான்ஸில் 147,969 தொற்றுக்களும், 18,681 மரணங்களும், ஜேர்மனியில் 141,397 தொற்றுக்களும், 4352 மரணங்களும், பிரித்தானியாவில் 108,692 தொற்றுக்களும், 14,576 மரணங்களும் பதிவாகியுள்ளன.
சீனாவில் இதுவரை 82,719 தொற்றுக்களும், 4636 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கனடாவில் இதுவரை 31,927 தொற்றுக்களும், 1366 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை, சீனாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஆரம்பமாகியதாகக் கருதப்படும் வூஹானில், இந்த தொற்றுக் காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விடச் சுமார் ஐம்பது சதவீதம் அதிகமானதென அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
வூஹானில் மரணமானவர்களின் எண்ணிக்கை 1290 ஆல் அதிகரித்து 3,869 ஆக உயர்வடைந்துள்ளதென அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதையடுத்துச் சீனாவில் மரணமானவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக அதிகரித்துள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment