Skip to main content

கோவிட்-19: உலக இழப்பின் கால்ப்பங்கைக் கடந்தது அமெரிக்கா.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59,266 ஆக பதிவாகியுள்ளது.

கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக
முப்பத்தொரு இலட்சத்துப் பதின்மூவாயிரத்தைக்(3,117,880) கடந்துள்ளதுடன் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாக(217,756) காணப்படுகின்றது.

எனினும் அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்துப் பன்னிரெண்டாயிரத்தைக்(1,012,583) கடந்துள்ளது. அங்கு ஐம்பத்தொன்பதினாயிரத்துக்கும்  அதிகமானவர்கள் மரணமானார்கள். வியட்னாம் போர் முழுவதிலும் மரணமான அமெரிக்கர்களை விட அதிகமானோர் அங்கு கொறோனா தொற்றால் மரணமாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1968ம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் போரில் பதினேழாயிரம்(17,000) அமெரிக்கத் துருப்பினர் மரணித்தனர். ஆனால் கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக மரணித்துள்ளவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக ஸ்பெய்னில் 232,128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 23,822 பேர் மரணித்துள்ளனர்.

எனினும் அங்கு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்தின் விபரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் நாளின் பின்னர் படிப்படியாக அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

இதேவேளை இத்தாலியில் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 202,000ஆக காணப்படுகிறது. இவர்களில் 27,359 பேர் மரணித்துள்ளனர்.

இத்தாலியிலும், பிரித்தானியாவிலும் தொற்றால் பாதிக்கப்படும் சிறார்கள் மற்றும் குழந்தைகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், இவ்விடயம் குறித்து இரண்டு நாட்டு மருத்துவர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் தொற்றால் 162,350 பாதிக்கப்பட்டவர்களி;ன் எண்ணிக்கை ஆகவும், மரணித்தவர்களின் எண்ணிக்கை 21,678 ஆகவும் உள்ளது.

ஃபிரான்சில் கொறோனா தொற்றால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேர் மரணித்தும் உள்ளனர்.

இந்நிலையில் அங்கு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரும், பள்ளிக்கூட மாணவர்களும் சுவாசக் கவசங்களை அணியவேண்டுமென இந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வாரங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படவுள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.