பிரான்சில் வசித்து ஈழத்து மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் இன்று புதன்கிழமை ஏப்ரல் 22ம் நாள், கொறோனா நுண்மித் தொற்றால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மருத்துவச் சிகிச்சைக்காக வாராந்தம் மருத்துவமனை சென்று வந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் நுண்மித் தொற்று ஏற்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று தனது 85-வது அகவையில் காலமானார்.
ஈழத்துத் திரைப்படங்களான கடமையின் எல்லை, நெஞ்சுக்கு வீதி, புதிய காற்று, தெய்வம் தந்த வீடு, நிர்மலா ஆகியவற்றில் நடித்திருந்தார்.
இவற்றில் நிர்மலா திரைப்படம் ரகுநாதனால் தயாரித்து வெளியிடப்பட்டிருந்தது. அதனால் அவர் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம்
சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை போன்ற புகழ்பெற்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
1935ம் ஆண்டு பிறந்த ரகுநாதன், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்.
கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் தன்னுடைய கலைப்பயணத்தை தொடர்ந்த அவர், எழுத்தாளராக, நடிகராக, தயாரிப்பாளராக என்று பல்வேறு பரிமாணங்களையும் தொட்டதுடன், தென்னிந்தியாவில் திரைப்படத்துறையிலும் பயிற்சிபெற்ற முதுபெரும் கலைஞராக திகழ்ந்தார்.
மருத்துவச் சிகிச்சைக்காக வாராந்தம் மருத்துவமனை சென்று வந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் நுண்மித் தொற்று ஏற்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று தனது 85-வது அகவையில் காலமானார்.
ஈழத்துத் திரைப்படங்களான கடமையின் எல்லை, நெஞ்சுக்கு வீதி, புதிய காற்று, தெய்வம் தந்த வீடு, நிர்மலா ஆகியவற்றில் நடித்திருந்தார்.
இவற்றில் நிர்மலா திரைப்படம் ரகுநாதனால் தயாரித்து வெளியிடப்பட்டிருந்தது. அதனால் அவர் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம்
சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை போன்ற புகழ்பெற்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
1935ம் ஆண்டு பிறந்த ரகுநாதன், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்.
கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் தன்னுடைய கலைப்பயணத்தை தொடர்ந்த அவர், எழுத்தாளராக, நடிகராக, தயாரிப்பாளராக என்று பல்வேறு பரிமாணங்களையும் தொட்டதுடன், தென்னிந்தியாவில் திரைப்படத்துறையிலும் பயிற்சிபெற்ற முதுபெரும் கலைஞராக திகழ்ந்தார்.

Comments
Post a Comment