Skip to main content

மூத்த கலைஞர் ஏ.ரகுநாதனை கோவிட்-19 காவு கொண்டது.

பிரான்சில் வசித்து ஈழத்து மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் இன்று புதன்கிழமை ஏப்ரல் 22ம் நாள், கொறோனா நுண்மித் தொற்றால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மருத்துவச் சிகிச்சைக்காக வாராந்தம் மருத்துவமனை சென்று வந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் நுண்மித் தொற்று ஏற்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று தனது 85-வது அகவையில் காலமானார்.

ஈழத்துத் திரைப்படங்களான கடமையின் எல்லை, நெஞ்சுக்கு வீதி, புதிய காற்று, தெய்வம் தந்த வீடு, நிர்மலா ஆகியவற்றில் நடித்திருந்தார்.

இவற்றில் நிர்மலா திரைப்படம் ரகுநாதனால் தயாரித்து வெளியிடப்பட்டிருந்தது. அதனால் அவர் நிர்மலா ரகுநாதன் என்று அழைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன்  தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம்
சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை போன்ற புகழ்பெற்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.

1935ம் ஆண்டு பிறந்த ரகுநாதன், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். 

கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் தன்னுடைய கலைப்பயணத்தை தொடர்ந்த அவர், எழுத்தாளராக, நடிகராக, தயாரிப்பாளராக என்று பல்வேறு பரிமாணங்களையும் தொட்டதுடன், தென்னிந்தியாவில் திரைப்படத்துறையிலும் பயிற்சிபெற்ற முதுபெரும் கலைஞராக திகழ்ந்தார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.