Skip to main content

73 பில்லியன் ஊதிய மாநியச் சட்டத்தை லிபரல் அரசாங்கம் நிறைவேற்றியது

கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக கனடிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு உதவும் வண்ணம் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஊதிய மாநியச் சட்டமூலம் இன்று (ஏப்ரல் 11) நிறைவேற்றப்பட்டது.

கொறொனா வைரஸ் தொற்றையடுத்து கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்யும் அதேவேளை, பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள கனடிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக 73 பில்லியன் டொலரைக் கொண்ட இந்த அவசரகால மானிய ஊதியச் சட்டம் (CEWS-Canada Emergency Wage Subsidy )
 இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

338 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட 20 உறுப்பினர்களுடன் கூடிய அவையில், இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் நாயகம் ஜூலி பயற்றேயின் ஒப்புதலுடன் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது.

Governor General Julie Payette
இதன் மூலம் இந்த இடர்காலத்தில் தனது வருமானத்தின் குறைந்தது 30 சதவீதத்தை இழந்த வணிக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியார்களை அந்நிறுவனங்கள் மீளவும் இணைந்துக் கொள்ளவுள்ளன.

இந்நிலையில் அவர்களின் மாதாந்த வேதனத்தின் 75 சதவீத கொடுப்பனவை, அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு அரசு வழங்கவுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.