கனடாவில் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16, 2020) காலை 9 மணிவரை, கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துப் பத்தாகவும்(1010), கொல்லுயிரி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,379 ஆகவும் அதிகரித்துள்ளன.
ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி தொற்று காரணமாக நேற்று புதன்கிழமை 51 பேர் உயிரிழந்தனர். அத்துடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 494 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 8,447 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் மாகாணத்தில் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆல் அதிகரித்து 385 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரை, குபெக்கில் 487 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 75 பேரும், அல்பேட்டாவில் 48 பேரும் மரணமானார்கள்.
குபெக்கில் 14,860 பேருக்கும், அல்பேட்டாவில் 1,996 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,561 பேருக்கும் கொல்லுயிரி தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் பத்து மாகாணங்களிலும், நுனவுட் தவிர்ந்த ஏனைய இரண்டு மாகாணங்களிலும் கொறோனா தொற்று பரவியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூ பிறண்ஸ்விக், பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட் ஆகியன தவிர்ந்த எட்டு மாகாணங்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி தொற்று காரணமாக நேற்று புதன்கிழமை 51 பேர் உயிரிழந்தனர். அத்துடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 494 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 8,447 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் மாகாணத்தில் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆல் அதிகரித்து 385 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரை, குபெக்கில் 487 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 75 பேரும், அல்பேட்டாவில் 48 பேரும் மரணமானார்கள்.
குபெக்கில் 14,860 பேருக்கும், அல்பேட்டாவில் 1,996 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,561 பேருக்கும் கொல்லுயிரி தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் பத்து மாகாணங்களிலும், நுனவுட் தவிர்ந்த ஏனைய இரண்டு மாகாணங்களிலும் கொறோனா தொற்று பரவியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூ பிறண்ஸ்விக், பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட் ஆகியன தவிர்ந்த எட்டு மாகாணங்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.


Comments
Post a Comment