Skip to main content

கோவிட்-19 கொல்லுயிரி முப்பதாயிரத்தை தொடும் கனடா

கனடாவில் இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16, 2020) காலை 9 மணிவரை, கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துப் பத்தாகவும்(1010), கொல்லுயிரி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,379 ஆகவும் அதிகரித்துள்ளன.

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி தொற்று காரணமாக நேற்று புதன்கிழமை 51 பேர் உயிரிழந்தனர். அத்துடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 494 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 8,447 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் மாகாணத்தில் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆல் அதிகரித்து 385 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரை, குபெக்கில் 487 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 75 பேரும், அல்பேட்டாவில் 48 பேரும் மரணமானார்கள்.

குபெக்கில் 14,860 பேருக்கும், அல்பேட்டாவில் 1,996 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,561 பேருக்கும் கொல்லுயிரி தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பத்து மாகாணங்களிலும், நுனவுட் தவிர்ந்த ஏனைய இரண்டு மாகாணங்களிலும் கொறோனா தொற்று பரவியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூ பிறண்ஸ்விக், பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட் ஆகியன தவிர்ந்த எட்டு மாகாணங்களிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.