கோவிட்19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாற்பத்தாறாயிரத்தைக் கடந்தது.
கனடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,848 ஆக உயர்வடைந்ததுடன், அவர்களில் 2560 மரணித்துள்ளனர். 17328 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குபெக் மாகாணத்தில் 24107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1515 பேர் மணித்துள்ளனர்.
இரண்டாம் நிலையில் உள்ள ஒன்டாரியோவில் இரண்டு வாரங்களின் பின்னர், குறைந்தளவிலான கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இன்று வெளியாகிய தரவுகளின்படி, ஒன்ராறியோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 437 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றயதினம் 476 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகிய எண்ணிக்கை அதனை விட குறைவாக அமைந்துள்ளமை சற்று நம்பிக்கையை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 13ம் திகதி 421 பேர் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாகவம், 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய எண்ணிக்கையே மிகவும் குறைந்தளவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14432 ஆக அதிகரித்துள்ளதுடன், 835 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அடுத்தபடியாக அல்பேர்ட்டாவிலும் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் முறையே 4233 பேருக்கும், 1948 பேருக்கும் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், முறையே 73 மற்றும் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, கனடாவின்சில மாகாணங்களில் மீண்டும் பொருளாதாத்தை செயற்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
குறிப்பாக ஒன்ராறியோ மற்றும் குபெக் மாகாணங்கள் தமது திடடங்கள் தொடர்பாக அடுத்தவாரம் விபரங்களை வெளியிடவுள்ளன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாகாண முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ, ஏற்கனவே கோவிட்19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
எனவே பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
கனடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,848 ஆக உயர்வடைந்ததுடன், அவர்களில் 2560 மரணித்துள்ளனர். 17328 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குபெக் மாகாணத்தில் 24107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1515 பேர் மணித்துள்ளனர்.
இரண்டாம் நிலையில் உள்ள ஒன்டாரியோவில் இரண்டு வாரங்களின் பின்னர், குறைந்தளவிலான கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இன்று வெளியாகிய தரவுகளின்படி, ஒன்ராறியோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 437 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றயதினம் 476 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகிய எண்ணிக்கை அதனை விட குறைவாக அமைந்துள்ளமை சற்று நம்பிக்கையை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 13ம் திகதி 421 பேர் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாகவம், 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய எண்ணிக்கையே மிகவும் குறைந்தளவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14432 ஆக அதிகரித்துள்ளதுடன், 835 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அடுத்தபடியாக அல்பேர்ட்டாவிலும் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் முறையே 4233 பேருக்கும், 1948 பேருக்கும் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், முறையே 73 மற்றும் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, கனடாவின்சில மாகாணங்களில் மீண்டும் பொருளாதாத்தை செயற்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
குறிப்பாக ஒன்ராறியோ மற்றும் குபெக் மாகாணங்கள் தமது திடடங்கள் தொடர்பாக அடுத்தவாரம் விபரங்களை வெளியிடவுள்ளன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாகாண முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ, ஏற்கனவே கோவிட்19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
எனவே பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.


Comments
Post a Comment