Skip to main content

கோவிட்-19: கனடிய நிலவரம்

கோவிட்19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாற்பத்தாறாயிரத்தைக் கடந்தது.

கனடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,848 ஆக உயர்வடைந்ததுடன், அவர்களில் 2560 மரணித்துள்ளனர். 17328 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குபெக் மாகாணத்தில் 24107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1515 பேர் மணித்துள்ளனர்.

இரண்டாம் நிலையில் உள்ள ஒன்டாரியோவில் இரண்டு வாரங்களின் பின்னர், குறைந்தளவிலான கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இன்று வெளியாகிய தரவுகளின்படி, ஒன்ராறியோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 437 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றயதினம் 476 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகிய எண்ணிக்கை அதனை விட குறைவாக அமைந்துள்ளமை சற்று நம்பிக்கையை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 13ம் திகதி 421 பேர் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாகவம், 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய எண்ணிக்கையே மிகவும் குறைந்தளவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14432 ஆக அதிகரித்துள்ளதுடன், 835 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அடுத்தபடியாக அல்பேர்ட்டாவிலும் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் முறையே 4233 பேருக்கும், 1948 பேருக்கும் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், முறையே 73 மற்றும் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதேவேளை, கனடாவின்சில மாகாணங்களில் மீண்டும் பொருளாதாத்தை செயற்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

குறிப்பாக ஒன்ராறியோ மற்றும் குபெக் மாகாணங்கள் தமது திடடங்கள் தொடர்பாக அடுத்தவாரம் விபரங்களை வெளியிடவுள்ளன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாகாண முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ, ஏற்கனவே கோவிட்19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.