Skip to main content

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சஸ்கற்றுவானின் லோச்ச்சேயில்(La Loche) ஊரடங்கு உத்தரவு.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கனடாவில் மாகாண அரசுக்கள் அவசரகால நிலைப்பிரகடணத்தை அறிவித்துள்ள நிலையில், சஸ்கற்றுவானின் வடமேற்கேயுள்ள லோச்ச்(La Loche)  புறநகர்க் கிராமத்தில் ஊரடங்குச் உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் சஸ்கற்றூனில் இருந்து ஆறாயிரம் (6000) கிலோமீற்றர் வடக்கேயுள்ள லோ-ச்ச் கிராமம்புறப் பகுதியில் நுண்மித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம், சஸ்கற்றுவானில் பத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட விடயங்களும் ஏனைய மாகாணங்களைப் போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும்  Denesuline  மொழியைப் பேசும் பூர்வகுடியின மக்கள் குறைந்தது 30 சதவீதம் வாழும் அக்கிராமத்தில், மக்கள் ஒன்று கூடுவது உள்ளிட்ட விடயங்களை நடைமுறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் காணப்படும் சிக்கல் நிலையை கருத்திற் கொண்டு, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

சஸ்கட்டுவானில் நேற்றைய தினம் புதிதாக ஆறு தொற்றுக்கள் இனம் காணப்பட்ட நிலையில் இதுவரை 313 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 266 பேருக்கு வெளியிடப்பயணம் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டவையாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் சஸ்கற்றுவானில் தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டவர்களில் ஒருவர், அங்கு முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலைவரையான புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33,951 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1529 ஆகவும் காணப்படுகின்றது. அத்துடன் 11,554 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.