ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி தொற்றால் இன்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 483 ஆல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒன்டாரியோவில் இத்தொற்றால் பாதிக்கப்படடோரின் எண்ணிக்கை 7,953 ஆக உயர்வடைந்துள்ளது.
மரணமானோரின் எண்ணிக்கை 43 ஆல் அதிகரித்து 334 ஆக உயர்வடைந்துள்ளது. தனியொரு நாளில் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான மரணங்களாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 769 பேரில் 255 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களில் 199 பேர் சுவாச உதவிக் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை ஒன்டாரியோவில் இயங்கிவரும் 114 மூதாளர்களை பராமரிக்கும் தாதியர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்டாரியோவில் ஏற்பட்ட 334 மரணங்களில் 134 தாரியர் பராமரிப்பு இல்லங்களிலேயே நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒன்டாரியோவில் கோவிட்-19 தொற்றுக் குறித்த 4852 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இந்த நாளார்ந்த பரிசோதனையின் எண்ணிக்கை இந்த மாத இறுதிக்குள் 13 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும் என்று முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரித் தொற்றால் பாதிக்கப்;பட்டவர்களின் எண்ணிக்கை 27,063 ஆக அதிகரித்துள்ளது.
மரணமானோரின் எண்ணிக்கை 903 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் ஒன்டாரியோவில் இத்தொற்றால் பாதிக்கப்படடோரின் எண்ணிக்கை 7,953 ஆக உயர்வடைந்துள்ளது.
மரணமானோரின் எண்ணிக்கை 43 ஆல் அதிகரித்து 334 ஆக உயர்வடைந்துள்ளது. தனியொரு நாளில் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான மரணங்களாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 769 பேரில் 255 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களில் 199 பேர் சுவாச உதவிக் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை ஒன்டாரியோவில் இயங்கிவரும் 114 மூதாளர்களை பராமரிக்கும் தாதியர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்டாரியோவில் ஏற்பட்ட 334 மரணங்களில் 134 தாரியர் பராமரிப்பு இல்லங்களிலேயே நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒன்டாரியோவில் கோவிட்-19 தொற்றுக் குறித்த 4852 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இந்த நாளார்ந்த பரிசோதனையின் எண்ணிக்கை இந்த மாத இறுதிக்குள் 13 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும் என்று முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா கொல்லுயிரித் தொற்றால் பாதிக்கப்;பட்டவர்களின் எண்ணிக்கை 27,063 ஆக அதிகரித்துள்ளது.
மரணமானோரின் எண்ணிக்கை 903 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் குறிப்பிடும் படியாக குபெக்கில் 14,248 பேருக்கும், அல்பேட்டாவில் 1,870 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,517 பேருக்கும் கோவிட்-19 தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Comments
Post a Comment