தமிழகத்தில் கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 72 பேர் புதிதாக இன்று இனம் காணப்பட்ட நிலையில், அங்கு தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் சுமார் 866 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 22 பேர் மரணித்தும் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்ராவா(Punya Salila Srivastava) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகப் பகுதியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 07 பேர் இனம் காணப்பட்ட நிலையில் திங்கட்கிழமை வரை முழு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது
பெரம்பலூரில் தீயணைப்பு வீரர், கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் 7 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூரில் ஏப்ரல் 27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள. மருந்தகங்கள் தவிர காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 29ம் நாள் வரை காலை 6 மணி முதல், 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவ்வாறே, சேலம் மற்றும் திருப்பூரில், ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 28ம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் சுமார் 866 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 22 பேர் மரணித்தும் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்ராவா(Punya Salila Srivastava) தெரிவித்துள்ளார்.
![]() |
| From Twitter |
பெரம்பலூரில் தீயணைப்பு வீரர், கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் 7 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூரில் ஏப்ரல் 27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள. மருந்தகங்கள் தவிர காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 29ம் நாள் வரை காலை 6 மணி முதல், 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவ்வாறே, சேலம் மற்றும் திருப்பூரில், ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 28ம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


Comments
Post a Comment