ரொறண்டோ பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 1200 பேர் எதிர்வரும் வாரங்களில் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று அபாயத்தால் ரொறண்டோ பொதுப்போக்குவரது ரிரிசியை பயன்படுத்தும் பயணிகள் 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இந்த பணி இடைநீக்கம் செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ரொறண்டோ பொதுப் போக்குவரத்துச் சபையின் (The Toronto Transit Commission) தலைமை நிர்வாக அதிகாரி Rick Leary தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் நீங்கி வழமைக்கு திரும்பும் பட்சத்தில், மீண்டும் அனைவரும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுடன், நகர சபையும் இணைந்து தீர்வு காணவேண்டும் என்று ரிரிசி பணியாளர்களின் தொழிற்சங்கம் ATU Local 113 இன் தலைவர் Carlos Santos குறிப்பிட்டுள்ளார்.
இந்த நுண்மித் தொற்றால் உருவான இக்கட்டான சூழ்நிலையிலும், ரிரிசி பணியாளர்கள் தமது குடும்பத்தினரின் நலனைக் காட்டிலும் பொதுநலனை கருத்திற் கொண்டு இரவு பகலாக சேவையாற்றி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கோவிட்-19 தொற்று அபாயத்தால் ரிரிசி பொதுப்போக்குவரத்துச் சேவைக்கு மாதாந்தம் சுமார் 90 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக நகர முதல்வர் ஜோன் டோறி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று அபாயத்தால் ரொறண்டோ பொதுப்போக்குவரது ரிரிசியை பயன்படுத்தும் பயணிகள் 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இந்த பணி இடைநீக்கம் செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ரொறண்டோ பொதுப் போக்குவரத்துச் சபையின் (The Toronto Transit Commission) தலைமை நிர்வாக அதிகாரி Rick Leary தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் நீங்கி வழமைக்கு திரும்பும் பட்சத்தில், மீண்டும் அனைவரும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுடன், நகர சபையும் இணைந்து தீர்வு காணவேண்டும் என்று ரிரிசி பணியாளர்களின் தொழிற்சங்கம் ATU Local 113 இன் தலைவர் Carlos Santos குறிப்பிட்டுள்ளார்.
இந்த நுண்மித் தொற்றால் உருவான இக்கட்டான சூழ்நிலையிலும், ரிரிசி பணியாளர்கள் தமது குடும்பத்தினரின் நலனைக் காட்டிலும் பொதுநலனை கருத்திற் கொண்டு இரவு பகலாக சேவையாற்றி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை கோவிட்-19 தொற்று அபாயத்தால் ரிரிசி பொதுப்போக்குவரத்துச் சேவைக்கு மாதாந்தம் சுமார் 90 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக நகர முதல்வர் ஜோன் டோறி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment