Skip to main content

கோவிட்-19: வருவாய் இழப்பால் 1200 ரிரிசி பணியாளர்கள் இடைநீக்கம்

ரொறண்டோ பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 1200 பேர் எதிர்வரும் வாரங்களில் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று அபாயத்தால் ரொறண்டோ பொதுப்போக்குவரது ரிரிசியை பயன்படுத்தும் பயணிகள் 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இந்த பணி இடைநீக்கம் செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ரொறண்டோ பொதுப் போக்குவரத்துச் சபையின்  (The Toronto Transit Commissionதலைமை நிர்வாக அதிகாரி Rick Leary தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் நீங்கி வழமைக்கு திரும்பும் பட்சத்தில், மீண்டும் அனைவரும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுடன், நகர சபையும் இணைந்து தீர்வு காணவேண்டும் என்று ரிரிசி பணியாளர்களின் தொழிற்சங்கம் ATU Local 113 இன் தலைவர் Carlos Santos குறிப்பிட்டுள்ளார்.

இந்த நுண்மித் தொற்றால் உருவான இக்கட்டான சூழ்நிலையிலும், ரிரிசி பணியாளர்கள் தமது குடும்பத்தினரின் நலனைக் காட்டிலும் பொதுநலனை கருத்திற் கொண்டு இரவு பகலாக சேவையாற்றி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கோவிட்-19 தொற்று அபாயத்தால் ரிரிசி பொதுப்போக்குவரத்துச் சேவைக்கு மாதாந்தம் சுமார் 90 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக நகர முதல்வர் ஜோன் டோறி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...