Skip to main content

கோவிட்-19: அனைத்துலக நிலவரம்

அனைத்துலக ரீதியாக கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்தைக் கடந்துள்ளது.

கனடிய நேரம் இன்று காலை ஆறு மணியளவில் Johns Hopkins  பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்து எட்டாயிரத்து ஐநூற்றி இருபத்தேழாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து முன்னூற்று முப்பத்து மூன்றாக காணப்படுகின்றது.

கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒன்பது இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் பேர் நுண்மித் தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஐம்பத்தினான்காயிரத்து நூற்றி அறுபத்தொரு பேர்(54161) மரணித்துள்ளனர்.

ஸ்பெயினில் நுண்மித் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,759 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 22902 ஆகவும், இத்தாலியில் தொற்றுக்குள்ளானவர்கள் 195351 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 26384 ஆகவும் காணபப்டுகின்றன.

பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்கள் 161,644 பேர் என்றும் மரணித்தோர் 22614 ஆகவும், ஜேர்மனியில் முறையே 156,513 பேர் தொற்றுக்குள்ளாகியும் 5877 பேர் மரணித்தும் உள்ளனர்.

பிரித்தானியாவில் 149,569 பேர் தொற்றுக்குள்ளாகியும் 20319 பேர் மரணித்தும் உள்ளனர்.

துருக்கியில் நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து எட்டாயிரத்தைக் கடந்துள்ளதுள்ளதுடன் 2706 பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர்.

கனடாவில் நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45354 ஆகவும் மரணித்தோர் 2465 ஆகவும் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.

சீனாவில் நேற்று இனம் காணப்பட்ட 11 புதிய தொற்றுக்களுடன் 84325 பேர் தொற்று உறுதி செய்யபப்பட்டிருந்ததுடன் 4642 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன. 77346 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாகவும், கோவிட்-19 தொற்று உருவான குபே மாகாணத்தின் வூஹானில் தொற்றால் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.