10% நிலநெய் உற்பத்தி குறைப்பு : ஒபெக் நாடுகள் முடிவு.
கோவிட் 19 தொற்றுகளால் ஏற்பட்ட பாரிய முடக்கநிலை காரணமாக உலகத்தின் பெற்றோலிய பயன்பாடு மிகவும் குறைந்துள்ளதையடுத்து நிலநெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஏறக்குறைய 10 வீத உற்பத்தியைக் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணொளிக் கலந்துரையாடலின் பின்னர் இந்த ஒப்பந்தம் ஓபெக் நாடுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இடம்பெற்ற பெட்ரோலிய உற்பத்திக் குறைப்பு தொடர்பில்இதுவே மிகப்பெரிய உற்பத்திக் குறைப்பு ஆகும். எண்ணெய் உற்பத்தியாளர்களான ஒபெக நாடுகள் உட்பட ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகள் பலவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ளன. இத்திட்டம் ஏப்ரல் 9ம் திகதி முன்வைக்கப்பட்டது. ஆனால் மெக்சிகோ இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக ஒரு நாளைக்கு 9.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தித்தி; குறைக்கப்படவுள்ளது.

Comments
Post a Comment