Skip to main content

கிழக்கு இலண்டனில் கொடூரம், இரண்டு குழந்தைகள் பலி.


பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்றில் தமிழ்க் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அகவை ஒன்று பெண் குழந்தை ஒன்று, அகவை மூன்று சிறுவன் ஒருவனும் உயிரிழந்தனர்.

கிழக்கு இலண்டனின் இல்ஃபோர்ட்டில்( Ilford ) வசித்துவரும் 40 அகவையுடைய நிதின்குமார் (Nithin Kumar) என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் பிரித்தானிய நேரம் மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கூரான ஆயுதம் ஒன்றால் இரண்டு குழந்தைகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவ இடத்திலேயே அகவை ஒன்றையுடைய பெண் குழந்தை உயிரிழந்ததுடன், அகவை மூன்றையுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெற்றோ பொலிட்டன்(Metropolitan Police) காவற்துறையினர் தெரிவித்தனர்.

உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குடும்பத்தர், தற்சமயம் ஆபத்தான நிலையைக் கடந்துள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மெற்றோ பொலிட்டன் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.