பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்றில் தமிழ்க் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அகவை ஒன்று பெண் குழந்தை ஒன்று, அகவை மூன்று சிறுவன் ஒருவனும் உயிரிழந்தனர்.
கிழக்கு இலண்டனின் இல்ஃபோர்ட்டில்( Ilford ) வசித்துவரும் 40 அகவையுடைய நிதின்குமார் (Nithin Kumar) என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் பிரித்தானிய நேரம் மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கூரான ஆயுதம் ஒன்றால் இரண்டு குழந்தைகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சம்பவ இடத்திலேயே அகவை ஒன்றையுடைய பெண் குழந்தை உயிரிழந்ததுடன், அகவை மூன்றையுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெற்றோ பொலிட்டன்(Metropolitan Police) காவற்துறையினர் தெரிவித்தனர்.
உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குடும்பத்தர், தற்சமயம் ஆபத்தான நிலையைக் கடந்துள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மெற்றோ பொலிட்டன் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
Post a Comment