இந்தியாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரத்தைக்(26,000) ஐக் கடந்துள்ளது.
இந்தியாவில் உள்ளுர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடளாவிய ரீதியில் 811 தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26270 ஆக உயர்வடைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 824 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5210 பேர் குணமடைந்துள்ளனர்.
கொறோனா நுண்மித் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளதுடன், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மாநிலங்களில் பதிவாகியுள்ள புள்ளிவிபரங்களின் படி, மஹாராஷ்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 1715 தொற்றுக்களுடன் மொத்த எண்ணிக்கை 7628 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தொற்றுக்கள் அம்மாநிலத்தில் பதிவாக இரண்டாவது அதிகூடிய பதிவாக காணப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை 1755 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.
அங்கு 323 பேர் உயிரிழந்துள்ளதுடன், 840 பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
இரண்டாவதாக, குஜராத் மாநிலத்தில் சுமார் 3071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 265 பேர் குணமடைந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில், தமிழகத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27 செய்தியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் சுமார் 960 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 23 பேர் மரணித்தும் உள்ளனர். இதுவரை 80110 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 61 புதிய தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், அங்கு இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1016 உயர்வடைந்துள்ளது. இவர்களில் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அவ்வாறே, உத்தரப் பிரதேசத்தில் 1621 தொற்றுக்களும் 25 மரணங்களும் சம்பவித்துள்ளன. இந்நிலையில் எதி;ர்வரும் ஜூன் 30ம் நாள்வரை, எவ்வித பொதுக்கூட்டங்களோ, ஒன்று கூடல்களோ மேற்கொள்ள தடைவிதி;க்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2059 ஆக பதிவாகியுள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 தொற்றுக்களும் இதில் உள்ளடங்குகிறது.
இவர்களில் 493 பேர் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் உள்ளுர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடளாவிய ரீதியில் 811 தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26270 ஆக உயர்வடைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 824 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5210 பேர் குணமடைந்துள்ளனர்.
கொறோனா நுண்மித் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளதுடன், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மாநிலங்களில் பதிவாகியுள்ள புள்ளிவிபரங்களின் படி, மஹாராஷ்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 1715 தொற்றுக்களுடன் மொத்த எண்ணிக்கை 7628 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தொற்றுக்கள் அம்மாநிலத்தில் பதிவாக இரண்டாவது அதிகூடிய பதிவாக காணப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை 1755 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.
அங்கு 323 பேர் உயிரிழந்துள்ளதுடன், 840 பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
இரண்டாவதாக, குஜராத் மாநிலத்தில் சுமார் 3071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 265 பேர் குணமடைந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில், தமிழகத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27 செய்தியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் சுமார் 960 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 23 பேர் மரணித்தும் உள்ளனர். இதுவரை 80110 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 61 புதிய தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், அங்கு இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1016 உயர்வடைந்துள்ளது. இவர்களில் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அவ்வாறே, உத்தரப் பிரதேசத்தில் 1621 தொற்றுக்களும் 25 மரணங்களும் சம்பவித்துள்ளன. இந்நிலையில் எதி;ர்வரும் ஜூன் 30ம் நாள்வரை, எவ்வித பொதுக்கூட்டங்களோ, ஒன்று கூடல்களோ மேற்கொள்ள தடைவிதி;க்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2059 ஆக பதிவாகியுள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 தொற்றுக்களும் இதில் உள்ளடங்குகிறது.
இவர்களில் 493 பேர் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.



Comments
Post a Comment