பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் கொறொனா அச்சம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் ஒருவர் உயிர்பிரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று அச்சத்தால் பதற்றநிலை உருவானது.
வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை திரும்பிய 58 அகவையுடைய ஒருவர் சுகவீனமுற்ற நிலையில்,இன்று அதிகாலை மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொறொனா வைரஸ் தொற்று குறித்த பீதி மருத்துவமனை வட்டாரத்தைச் சூழ அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனிடையே குறித்த நபர் மாரடைப்பினால் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொரோனா தொற்றிற்குள்ளாகவில்லையெனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் இன்று மாலை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இரண்டாவது முறை ஏற்பட்ட வேளையில் முதலில் நெல்லியடியில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பின்னர் மந்திகை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் காலதாதமமாக கொண்டு சென்றதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில் அவர் மீது கொறொனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் மந்திகை மருத்துவமனை பிரேத அறையில் அவ்வுடலம் முதலில் தனித்து வைக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதற்ற நிலை தணிவடைந்தது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் ஒருவர் உயிர்பிரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று அச்சத்தால் பதற்றநிலை உருவானது.
வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை திரும்பிய 58 அகவையுடைய ஒருவர் சுகவீனமுற்ற நிலையில்,இன்று அதிகாலை மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொறொனா வைரஸ் தொற்று குறித்த பீதி மருத்துவமனை வட்டாரத்தைச் சூழ அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனிடையே குறித்த நபர் மாரடைப்பினால் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொரோனா தொற்றிற்குள்ளாகவில்லையெனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் இன்று மாலை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இரண்டாவது முறை ஏற்பட்ட வேளையில் முதலில் நெல்லியடியில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பின்னர் மந்திகை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் காலதாதமமாக கொண்டு சென்றதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில் அவர் மீது கொறொனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் மந்திகை மருத்துவமனை பிரேத அறையில் அவ்வுடலம் முதலில் தனித்து வைக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதற்ற நிலை தணிவடைந்தது.

Comments
Post a Comment