Skip to main content

மந்திகை மருத்துவமனையில் கொறொனா அச்சம்

பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் கொறொனா அச்சம்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் ஒருவர் உயிர்பிரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று அச்சத்தால் பதற்றநிலை உருவானது.

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை திரும்பிய 58 அகவையுடைய ஒருவர் சுகவீனமுற்ற நிலையில்,இன்று அதிகாலை மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொறொனா வைரஸ் தொற்று குறித்த பீதி மருத்துவமனை வட்டாரத்தைச் சூழ அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனிடையே குறித்த நபர் மாரடைப்பினால் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொரோனா தொற்றிற்குள்ளாகவில்லையெனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் இன்று மாலை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இரண்டாவது முறை ஏற்பட்ட வேளையில் முதலில் நெல்லியடியில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பின்னர் மந்திகை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் காலதாதமமாக கொண்டு சென்றதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது கொறொனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் மந்திகை மருத்துவமனை பிரேத அறையில் அவ்வுடலம் முதலில் தனித்து வைக்கப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதற்ற நிலை தணிவடைந்தது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.