கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றைப் போக்க பிரார்த்தனை என்ற பெயரில் பொய் கூறி யாழ்ப்பாணம் சென்றிருந்த சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த மதபோதகர், ஓர் நோய்காவி என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொறொனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட சமுதாய மருத்துவ அதிகாரி முரளி வல்லிபுரநாதன் நேற்று ஊடகவியலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சென்ற வேளையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்த போதும், விமானநிலையத்தில் பொய் கூறியுள்ளதாக மதபோதகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனையில் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், பின்னர் அவர்களில் 7 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக மருத்துமவர் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் போதகரின் ஆராதனையி;ல் கலந்து கொண்டோரை இனம் கண்டு, தனிமைப்படுத்தியதன் மூலம் பரவலை ஓரளவிற்கு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய பரிசோதனைகளில் புதிதாக எவரும் நோய் தொற்றுடன் காணப்படவில்லை. ஆனாலும் அபாயம் நீங்கிவிட்டதாக கருத முடியாதென தெரிவித்த அவர் ஆனையிறவு, பூநகரில் கண்காணிப்பு சோதனை சாவடிகளை அமைப்பதன் மூலம் புதிய தொற்றாளர்கள் மற்றும் காவிகளை வடிகட்டுவதன் ஊடாக முன்னுதாரணமான நோய் அற்ற பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அறிவிக்கலாமெனவும்; அவர் தெரிவித்தார்.
மேலும், வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை முன்னெடுக்க கூடிய பகுதிகள் தொடர்;பில் தாங்கள் பரிந்துரைகளை அரசிடம் செய்திருப்பதாகவும் அரசு இறுதி முடிவை எடுக்குமெனவும் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்திருந்தார்.
![]() |
| மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் |
யாழ்ப்பாணத்தில் கொறொனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட சமுதாய மருத்துவ அதிகாரி முரளி வல்லிபுரநாதன் நேற்று ஊடகவியலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சென்ற வேளையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்த போதும், விமானநிலையத்தில் பொய் கூறியுள்ளதாக மதபோதகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனையில் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், பின்னர் அவர்களில் 7 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக மருத்துமவர் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் போதகரின் ஆராதனையி;ல் கலந்து கொண்டோரை இனம் கண்டு, தனிமைப்படுத்தியதன் மூலம் பரவலை ஓரளவிற்கு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய பரிசோதனைகளில் புதிதாக எவரும் நோய் தொற்றுடன் காணப்படவில்லை. ஆனாலும் அபாயம் நீங்கிவிட்டதாக கருத முடியாதென தெரிவித்த அவர் ஆனையிறவு, பூநகரில் கண்காணிப்பு சோதனை சாவடிகளை அமைப்பதன் மூலம் புதிய தொற்றாளர்கள் மற்றும் காவிகளை வடிகட்டுவதன் ஊடாக முன்னுதாரணமான நோய் அற்ற பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அறிவிக்கலாமெனவும்; அவர் தெரிவித்தார்.
மேலும், வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை முன்னெடுக்க கூடிய பகுதிகள் தொடர்;பில் தாங்கள் பரிந்துரைகளை அரசிடம் செய்திருப்பதாகவும் அரசு இறுதி முடிவை எடுக்குமெனவும் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்திருந்தார்.


மனிதர்நாம் மனிதராகவே வாழ்வாே ம்.
ReplyDeleteசிந்தனை செய்மனமே.