Skip to main content

வடகொரியத் தலைவருக்கு இருதய சத்திரசிகிச்சை – ஜப்பான் ஊடகம் தகவல்.

Twitter Pic- Kim Jong Un
வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்னிற்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையின் பின்னர், அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ள சீன மருத்துவர் குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கிம் ஜொங் இறந்து விட்டதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட HKSTV எனப்படும் செய்மதித் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், அச்செய்தி நம்பகத் தன்மையான வழிமுறையூடாக கிடைக்கப் பெற்ற தகவல் என்று, அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைத் தலைவர் Shijian Xingzou தெரிவித்தார்.

இந்நிலையில், சீன மருத்துவக் குழுவின் பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜப்பானிய ஊடகமான Shukan Gendai, கிம் யொங்கிற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உணர்வியக்கமற்ற நிலையில்(Vegetative State) இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவுக்கு சென்ற சீன மருத்துவக் குழுவுக்கு மேலதிகமாக சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அரசியல் பீட உறுப்பினர் இரண்டு பேர் அடங்கிய குழுவொன்றும் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்விடயம் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு எந்தவொரு ஊடகத்திற்கும் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Picture
36 அகவையுடைய கிம் யொங், அவரது தந்தை கிம் யொங் இல்(Kim Jong-il), 2011ம் ஆண்டு மாரடைப்பினால் இறந்ததைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறை சர்வாதிகார தலைவராக ஆட்சியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.