கனடாவின் கிழக்கே, நோவஸ்கோஷியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆர்.சி.எம்.பி அதிகாரி ஒருவர், மற்றும் துப்பாக்கிதாரி உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோவஸ்கோஷியாவில் உள்ள கிராமப்புறப் பகுதியான Portapique இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
51 அகவையுடைய ஹேபிரியல் வோட்மன் (Gabriel Wortman) என்ற பல்மருத்துவரே இக்கொலையாளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை என்று 12 மணித்தியாலங்கள் தொடர்ந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 23 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்சீஎம்பி அதிகாரி ஹெய்டி ஸ்ரீவன்சன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி ஆர்சீஎம்பி அதிகாரிகளின் வாகனத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளதுடன், சீரூடையையும் அணிந்திருந்தார்.
ஆயுததாரியை கைது செய்துள்ளதாக அறிவித்த நோவஸ்கோஷியா காவற்துறையினர் பின்னர், அவரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் மற்றுமொரு ஆர்சீஎம்பி உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்;.
துப்பாக்கிதாரியான குறித்த பல்மருத்துவர் Dartmouth இல் ஓர் சொந்தமான பல்மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 2014ம் ஆண்டு புற்றுநோய் தடுப்புப் பிரிவுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
மிகுந்த உதவி செய்யக்கூடிய மனோபாவம் கொண்ட வோர்ட்மன், எளிமையாகவும் அன்பாகவும் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவராக காணப்பட்டதாக, அயலவர்கள் மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டு;ள்ளனர்.
எனினும் இவ்வாறான ஓர் கொடூரமான கொலைச்சம்பவத்தை அவர், புரிந்துள்ளார் என்பதை நம்பமுடியவில்லை என்று அவருடன், கல்விபயின்ற ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகள் பின்புலமாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது என்று தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் ஆரம்ப நிலையில் எதனையும் உறுதியாக கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
![]() |
| @RCMP Twitter- Gabriel Wortman |
51 அகவையுடைய ஹேபிரியல் வோட்மன் (Gabriel Wortman) என்ற பல்மருத்துவரே இக்கொலையாளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை என்று 12 மணித்தியாலங்கள் தொடர்ந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
![]() |
| @RCMP Twitter-Const.Heidi Stevenson |
துப்பாக்கிதாரி ஆர்சீஎம்பி அதிகாரிகளின் வாகனத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளதுடன், சீரூடையையும் அணிந்திருந்தார்.
![]() |
| @RCMP Twitter |
ஆயுததாரியை கைது செய்துள்ளதாக அறிவித்த நோவஸ்கோஷியா காவற்துறையினர் பின்னர், அவரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் மற்றுமொரு ஆர்சீஎம்பி உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்;.
துப்பாக்கிதாரியான குறித்த பல்மருத்துவர் Dartmouth இல் ஓர் சொந்தமான பல்மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 2014ம் ஆண்டு புற்றுநோய் தடுப்புப் பிரிவுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
மிகுந்த உதவி செய்யக்கூடிய மனோபாவம் கொண்ட வோர்ட்மன், எளிமையாகவும் அன்பாகவும் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவராக காணப்பட்டதாக, அயலவர்கள் மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டு;ள்ளனர்.
எனினும் இவ்வாறான ஓர் கொடூரமான கொலைச்சம்பவத்தை அவர், புரிந்துள்ளார் என்பதை நம்பமுடியவில்லை என்று அவருடன், கல்விபயின்ற ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.இச்சம்பவத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகள் பின்புலமாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது என்று தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் ஆரம்ப நிலையில் எதனையும் உறுதியாக கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.



Comments
Post a Comment