ஓக்வில்லைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்-19 அவசரகால நிலைப் பிரகடணத்தை மீறிய குற்றச்சாட்டில் ஒண்டாரியோ காவற்துறையால் 880 கனடிய டொலர் தண்டச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறொனா கொல்லுயிரியைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ மாகாண அரசால் அவசரகால நிலைப்பிரகடணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் அன்றி வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளியிடங்களில் ஒன்று கூடுவது, முகாமிடல், சமூக இடைவெளியைப் பேணுவது உள்ளிட்ட பல்வேறு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நகரசபையால் நிர்வகிக்கப்படும் வாசிசசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்டாரியோவின் தெற்கே ஓக்விலே நகரில் கோவிட்-19 அவசரகாலநிலைப் பிரகடணத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டு மாகாண காவற்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
ரொட் நெல்சன் என்ற குடும்பத்தர் அவர்களது வதிவிடத்துக்கு அண்மையில் உள்ள கலாச்சார மையம் ஒன்றின் வாகனதரிப்பிடத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் விளையாடக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சென்ற காவற்துறை அதிகாரி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் அந்த வாகன தரிப்பிடத்தில் வேறு எவரும் இல்லை என்றும், பிள்ளைகள் பொழுதைப் போக்கின்றனர் என்று நெல்சன் தெரிவித்தபோது, அவசரகால நிலைச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டை காவற்துறை அதிகாரி வழங்கியுள்ளார்.
இதேவேளை இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு, அனைவரது நன்மை மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும், பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் நகர முதல்வர் ரொப் பேர்ட்டன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 கொறொனா கொல்லுயிரியைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ மாகாண அரசால் அவசரகால நிலைப்பிரகடணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் அன்றி வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளியிடங்களில் ஒன்று கூடுவது, முகாமிடல், சமூக இடைவெளியைப் பேணுவது உள்ளிட்ட பல்வேறு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நகரசபையால் நிர்வகிக்கப்படும் வாசிசசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்டாரியோவின் தெற்கே ஓக்விலே நகரில் கோவிட்-19 அவசரகாலநிலைப் பிரகடணத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டு மாகாண காவற்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற காவற்துறை அதிகாரி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.எனினும் அந்த வாகன தரிப்பிடத்தில் வேறு எவரும் இல்லை என்றும், பிள்ளைகள் பொழுதைப் போக்கின்றனர் என்று நெல்சன் தெரிவித்தபோது, அவசரகால நிலைச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டை காவற்துறை அதிகாரி வழங்கியுள்ளார்.
இதேவேளை இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு, அனைவரது நன்மை மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும், பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் நகர முதல்வர் ரொப் பேர்ட்டன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment